மதுரையில் தனியார் நிறுவனங்களில் திடீர் வருமான வரித்துறை சோதனை?? கட்டுக்கட்டாக புதைக்கப்பட்ட பணம் !.ரகசிய அறையில் தங்க கட்டி என தகவல்!!

0
82
Sudden Income Tax raid on private companies in Madurai?? Money buried as a bundle!.Information as a gold bundle in a secret room!!
Sudden Income Tax raid on private companies in Madurai?? Money buried as a bundle!.Information as a gold bundle in a secret room!!

மதுரையில் தனியார் நிறுவனங்களில் திடீர் வருமான வரித்துறை சோதனை?? கட்டுக்கட்டாக புதைக்கப்பட்ட பணம் !.ரகசிய அறையில் தங்க கட்டி என தகவல்!!

மதுரையை தலைமையிடமாக கொண்டுள்ள ஜெயபாரத் அன்னை பாரத் மற்றும் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார் கட்டுமான நிறுவனங்கள் சில செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனங்களில் பல கோடி ரூபாய்க்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சென்னையில் வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு குறுஞ்செய்தி கிடைத்தது.

அதனைத்தொடர்துநேற்று சென்னையிலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் மதுரை வந்தடைந்தனர். விடியற்காலையில் நடைபெற்ற சோதனையில் கட்டுமான நிறுவன பங்குதாரர்களின் வீட்டில் கட்டுகட்டாய் பணம் மற்றும் தங்கம் ஆவணங்கள் சிக்கியது.

இதற்கு உரிய உரிமம்  இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.மேலும் இன்று மாலை வரை சோதனை நடைபெறும் என தகவல் தெரிவித்தனர்.அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரருமான சந்திரசேகருக்கு தொடர்புடைய இடங்களிலும் வரி ஏய்ப்பு காரணங்களுக்காக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

இச்சோதனை சுமார் நான்கு நாட்கள் வரை நடைபெற்று வருகிறது.தமிழகம் முழுதும் இரு அரசு ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான 40 இடங்களில் நடைபெற்ற இந்த வருமான வரித்துறை சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் தொழில் சார்ந்த பல்வேறு பொருட்களை வாங்கியதற்கு கணக்கு காட்ட போலி ரசீதுகளைப் பயன்படுத்தியிருப்பதும் தெரிய வந்தது.அதன் மூலம் பெருமளவில் வருமானத்தை மறைத்து காட்டியிருப்பதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்திரசேகருக்குத் தொடர்புடைய இடங்களில் போலி ரசீதுகளைப் பயன்படுத்தி பல்வேறு துணை ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருமானத்தை ஈட்டியிருப்பதும் அதற்கு உண்டான ஆவணங்கள் மற்றும் பொய்யான பணபரிவர்த்தனைகள் அடங்கிய கோப்புகளை மறைத்து வைக்க ரகசிய அறைகளைப் பயன்படுத்தி வந்ததும் வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனை மூலம் கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் மூலம் இரு ஒப்பந்ததாரர்களும் சேர்ந்து கணக்கில் காட்டப்படாத 500 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் தமிழகத்தில் சுமார் 20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

author avatar
Parthipan K