டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் (விமான எண் 6E2142), வானில் கடுமையான ஆலங்கட்டி புயலை சந்தித்து, விமானத்தின் முன்பகுதியில் (மூக்கு கோன்) மோசமான சேதத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது, மேலும் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மாலை நேரத்தில் பறந்து வந்த இந்த விமானம் ஸ்ரீநகருக்கு அருகில் வந்தபோது ஆலங்கட்டி புயல் ஏற்பட்டு, பயணிகளை பதட்டத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து விமானத்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்த நிலையில் இருந்தது. விமானிகள் சீராக செயல்பட்டு, விமானத்தை மாலை 6.30 மணிக்கு ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறக்கியனர்.
விமானத்தில் உள்ள ஒருவர் எடுத்த வீடியோவில், ஆலங்கட்டிகள் விமானத்தின் மேற்பரப்பை கடுமையாக தாக்கியது காட்டப்படுகிறது. அதன் தாக்கம் காரணமாக விமானத்தின் உள்ளே பயணிகள் பயத்தில் கத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
வீடியோ லிங்க்:
Indigo flight 6E-2142 from Delhi to Srinagar got caught in a severe hailstorm.
The flight landed safely and all passangers are safe.
Hailstorm was so severe that it damaged the plane's nose cone. pic.twitter.com/E0BioVa8tF
— Incognito (@Incognito_qfs) May 21, 2025
விமான தரையிறங்கியதும், பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் விமானம் பலத்த சேதம் அடைந்ததால், “Aircraft on Ground” (AOG) என அறிவிக்கப்பட்டு, உடனடி பழுதுபார்வைக்காக தரையில் நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
“இண்டிகோ 6E2142 விமானம், டெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்குப் பயணித்த போது, மோசமான வானிலை (ஆலங்கட்டி புயல்) ஏற்பட்டது. பைலட் ATC-க்கு அவசரநிலை அறிவித்தார். 227 பயணிகளும், விமான பணியாளர்களும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர்.”
இண்டிகோ நிறுவனமும் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு, விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக தெரிவித்தது. அதில் கூறியுள்ளதாவது.
“டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குப் புறப்பட்ட 6E2142 இண்டிகோ விமானம் திடீரென ஆலங்கட்டி புயலை சந்தித்தது. விமான மற்றும் கேபின் பணியாளர்கள் நிறுவனம் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றி விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினர். விமானம் தரையிறங்கியதும், பயணிகளின் நலன் மற்றும் வசதியை முன்னிலைப்படுத்தி, எங்கள் அணியினர் அவர்களை முறையாக கவனித்தனர். தேவையான பரிசோதனை மற்றும் பராமரிப்புக்கு பின் விமானம் மீண்டும் சேவைக்கு விடப்படும்.”
மேலும், இந்த புயலால் உருவான வானிலை மாற்றம் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, ஹரியானா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உருவான சூழ்நிலைச் சுழற்சி மற்றும் கிழக்கு-மேற்கு திசையில் பரவியுள்ள தாழ் அடுக்கிலான வாயுக்களால் இந்த வானிலை உருவானது.
இந்த வானிலை காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பல உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்படுவதோடு, பல விமானங்கள் திசை மாற்றப்பட்டன.