சுய உதவிக்குழு பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்!! ரூ.10 லட்சம் வழங்கும் தமிழக அரசு!!

Photo of author

By Divya

சுய உதவிக்குழு பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்!! ரூ.10 லட்சம் வழங்கும் தமிழக அரசு!!

Divya

பெண்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய மாநில அரசு பல சிறப்பாக நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.தற்பொழுது பெண்களுக்கு அரசு நலத் திட்டங்களில் முன்னுரிமை அளிப்பதால் அவர்களின் பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது.

குறிப்பாக சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு குறைவான வட்டியில் மானியத்துடன் கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.கிராமபுற பெண்களை தொழில் முனைவோராக மாற்ற மத்திய மற்றும் மாநில அரசு தொடர்ந்து கடனுதவி மற்றும் பயிற்சிகளை வழங்கி வருகிறது.

அந்தவகையில் தமிழகத்தில் உள்ள 1 லட்சம் பெண்களை தொழில் முனைவோராக மாற்ற ஒவ்வொரு சுய உதவிக் குழுவிற்கும் ரூ.10,00,000 வரை கடன் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்க உள்ளது.சிறு,குறு நடுத்தர தொழில் துறை இதை செயல்படுத்த இருக்கிறது.

பெண்களின் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் விதமாக அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் பெண்களை சிறந்த தொழில் முனைவோராக மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருக்கும் நிலையில் இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் சுய உதவிக் குழுக்களில் இருக்கும் பெண்களுக்கு குறைவான வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட உள்ளது.இதற்கு 6% வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.அரசு சார்பில் 20% வரை கடனுக்கு மானியம் வழங்கப்படும்.இந்த திட்டத்திற்காக ரூ.225 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு ஆண்டில் 20 ஆயிரம் பெண்களை தேர்வு செய்து சுயத் தொழில் செய்ய கடனுதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சுய உதவிக் குழுவில் இருக்கின்ற ஒவ்வொரு பெண்ணிற்கும் அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுய உதவிக்குழு தொடங்கி குறைந்தது 6 மாதம் நிறைவடைந்திருக்க வேண்டும்.சுய உதவிக் குழுவில் அதிகபட்சம்ம் 20 உறுப்பினர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.குழு உறுப்பினர்கள் 18 முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

குழு உறுப்பினரின் ஆண்டு வருமானம் ரூ.3,00,000 மிகாமல் இருக்க வேண்டும்.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சிறு தொழில் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.