மாநாடு திரைப்படம்! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட செய்தியால் கடுப்பில் ரசிகர்கள்!

Photo of author

By Sakthi

மாநாடு திரைப்படம்! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட செய்தியால் கடுப்பில் ரசிகர்கள்!

Sakthi

இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடித்து இருக்கின்ற திரைப்படம் தான் மாநாடு. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்ற நிலையில், சமீபத்தில் இந்த திரைப்படம் தொடர்பான படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்பட்டது.

நடிகர் சிம்புவின் நடிப்பில் வெகுநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் மாநாடு என்பதால் இதுதொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக அதிகமாக காணப்படுகிறது. இதற்கிடையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், தற்சமயம் பாடல் வெளியீடு செய்யும் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஏற்கனவே இந்த திரைப்படத்திற்காக நடிகர் சிம்புவின் ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறார்கள்.இந்தத் திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கு ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது இந்த வருடத்தின் ஆரம்பத்தில் திரைப்படத்தை வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டு இருந்தது. நோய் தொற்று பரவல் தீவிரமாக இருந்ததால் படப்பிடிப்பை தொடர இயலாமல் தடை ஏற்ப்பட்டது.

இதனை அடுத்து அந்த திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்ற சமயத்தில் நோய் தொற்று இரண்டாவது அலை உண்டானது. இதன் காரணமாக திரைப்படத்தின் பணிகள் மறுபடியும் பாதிப்புக்கு உள்ளாகின. ஆனாலும் நெருக்கடியான சமயத்திலும் இந்த திரைப்படத்தின் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று முடிந்தன.வெகுநாட்களாக இந்த திரைப்படம் தயாரிப்பில் இருப்பதன் காரணமாக, ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக மாநாடு திரைப்படத்தின் பாடல் எதிர்வரும் 14ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். ஆனால் சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் இயற்கை எய்தினார் என்று சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, மாநாடு திரைப்படத்தின் முதல் பாடல் ரம்ஜான் பண்டிகையன்று வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தற்சமயம் தெரிவித்திருக்கிறார். வேறு ஒரு தேதியில் பாடல் வெளியாகும் என்று ரசிகர்களுக்கு உறுதி கொடுத்திருக்கிறார். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதன் காரணமாக, நடிகர் சிம்புவின் ரசிகர்கள் பயங்கர கடுப்பில் இருப்பதாக தெரிய வருகிறது.