சூர்யா – பாலா கூட்டணி படத்தின் தலைப்பு? … அட ரெண்டுமே சூப்பரா இருக்கே!

0
138

சூர்யா – பாலா கூட்டணி படத்தின் தலைப்பு? … அட ரெண்டுமே சூப்பரா இருக்கே!

சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

சூரரைப் போற்று, ஜெய்பீம் என அடுத்தடுத்து ஓடிடிகளில் சூர்யா படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் சமீபத்தில் திரையரங்குகளில் அவர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க, பாலசுபர்மண்யம் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்றொரு முக்கியமான வேடத்தில் ஜோதிகா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கன்னியாகுமரியில் இதுவரை 35 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. இன்று இயக்குனர் பாலாவின் பிறந்தநாள் என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. படத்துக்கு ‘வணங்கான்’ அல்லது ‘கடலாடி’ என்ற தலைப்புகளில் ஒன்றை வைக்க பரிசீலிக்கப் பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.