டப்பிங் பணியில் சூர்யா! புகைபடத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!!

0
103

டப்பிங் பணியில் சூர்யா! புகைபடத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!!

‘ஜெய் பீம்’ படத்தை தொடர்ந்து, நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் நடிகர் சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

குறிப்பாக, சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் திரை உலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று மாபெரும் வெற்றி பெற்றன. இந்த இரு படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’.

சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் படங்கள் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, சூர்யாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வருகைக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையடுத்து, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கி உள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் தன் சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார். இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நடிகர் சூர்யா தெலுங்கு பதிப்பிற்கு டப்பிங் பேசும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இது குறித்த தகவலை தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K