கணிக்க முடியாத கதைக்களத்தில் சூர்யா?

Photo of author

By CineDesk

கணிக்க முடியாத கதைக்களத்தில் சூர்யா?

CineDesk

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை இறுதிச்சுற்று புகழ் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

பிரபல ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றது.

அதன்படி இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட பட்டது.இந்த போஸ்டரில் ஒரு சிட்டு குருவியின் சிறகில் இருந்து சூர்யாவின் முகம் தெரிவது அமைந்துள்ளது கதைக்களம் ஒரு கணிக்க முடியாத வண்ணம் அமைந்துள்ளது. மேலும் சூர்யாவின் ரசிகர்கள் இந்த செகண்ட் லுக் போஸ்டரை கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்களுக்கு கூடுதல் விருந்தாக அதன் டீஸர் வரும் 7-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.