கொரோனா தொற்றால் பாதித்த 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் குணமடைந்துள்ளனர்.. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா காலத்திலும் அரசு மருத்துவமனைகளில் இதர மருத்துவ சேவைகள் பாதிக்கப்படாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 542 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதேப்போல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 372 குழந்தைகளும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பெற்றோர்களுடன் அனுமதிக்கப்பட்ட 30 … Read more

மக்களே உஷார்… விதிமுறையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த கொரோனா விதிகளை மீறும் நபர்களுக்கான சட்ட மசோதா நிறைவேறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது‌. பொதுமக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது அதில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி சட்டமசோதா நிறைவேற்றப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று தமிழக சட்டப்பேரவை … Read more

19 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரை விநியோகம்: சுகாதாரத் துறை அமைச்சர்!

19 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரை விநியோகம்: சுகாதாரத் துறை அமைச்சர்! குழந்தைகள், சிறார்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார். தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி தாய்சேய் மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இந்த முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தேசிய … Read more

கன்னியாகுமரி தொகுதி எம்.பி. உடல்நிலை கவலைக்கிடம்… சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!

கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நோய்த் தொற்றானது சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர்கள் என யாரையும் விட்டுவைப்பதில்லை. அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமாருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதன் … Read more