குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய நிலக்கடலையை அகற்றி உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய நிலக்கடலையை அகற்றி, மருத்துவர்கள் உயிரைக் காப்பாற்றினர். திருப்பூர்: கருவம்பாளையம் அருகே உள்ள ஆலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கு ஒன்றரை வயதில், மலர்விழி என்னும் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தக் குழந்தைக்கு கடந்த 18-ம் தேதி நிலக்கடலை சாப்பிடும்போது புரை ஏறி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், திருப்பூர் அரசு … Read more

சாஃப்ட்வேர் இன்ஜினியர் செய்யும் அற்புத சேவை!!

சாஃப்ட்வேர் இன்ஜினியர் செய்யும் அற்புத சேவை!!

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் அமிர்தம் போன்றது. குழந்தைகள் வளருவதற்கு தாய்ப்பால் மிக முக்கியமானது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் குறைவாக கிடைக்கும் போது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் தாய் இல்லாத குழந்தைகள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாய் பால் என்பது எட்டா கனியாகும். குழந்தைகளுக்கு முழு ஊட்டச்சத்தை அளிக்கும் தாய்ப்பால் எந்த அளவுக்கு முக்கியம் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஆகஸ்ட் மாதம் முதல்வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்படுகிறது. தாய் … Read more

தொடரும் செல்போன் டவர் விபத்து!! திருப்பூரில் சோகம்..

தொடரும் செல்போன் டவர் விபத்து!! திருப்பூரில் சோகம்..

திருப்பூரில் நீண்டகாலமாக பராமரிப்பு இல்லாத 80 அடி உயரமுள்ள செல் டவர் சரிந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் சாலையில் தமிழ்நாடு திரையரங்கம் அருகே நீண்டகாலமாக பராமரிப்பு இல்லாத காரணத்தால் மிகவும் பழுதடைந்த நிலையில் செல்போன் டவர் ஒன்று இருந்தது. அந்த சாலையில் தினமும் நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத போது திடீரென அந்த செல்போன் டவர் சாலையில் சரிந்து விழுந்தது விபத்திற்க்குள்ளானது. இதனால் … Read more