அதிர்ச்சி தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலிலிருந்து அகற்றப்பட்ட 3 விரல்கள்! காரணம் என்ன?

நடிகர் விஜயகாந்த் திரையில் அவர் நடிக்கும் திரைப்படங்களில் பேசும் வசனங்கள் அனைத்தும் தமிழக மக்களால் எப்போதும் உன்னிப்பாக கவனிக்கப்படும் ஒரு வசனமாக இருந்து வந்திருக்கின்றன. அவருடைய குரலிலேயே ஒரு கம்பீரம் எப்போதும் தென்படும், அதன் காரணமாகவே அவருக்கு கொடுக்கப்படும் வசனம் கூட கம்பீரமான வசனமாகத்தான் இருக்கும். அவர் திரையில் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மனதில் ஆழமாக பதியும் வண்ணம் இருக்கும். இவருடைய திரைப்படங்களில் பல இடங்களில் அரசியல்ரீதியான ஆழமான கருத்துக்கள் இருக்கும் அப்படி அரசியல்ரீதியான கருத்துக்கள் … Read more

அதிர்ச்சி என்ன ஆனது விஜயகாந்துக்கு? மருத்துவமனையில் அனுமதி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்விலிருந்து வந்ததால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். மேலும் மேடைகளிலும் பெரிதாக உரையாற்றுவதில்லை. கட்சி நடவடிக்கைகளை அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தான் கவனித்துக் கொண்டு வருகிறார்கள். விஜயகாந்த் உடல் நலம் சரியில்லாமல் இருக்கின்ற சூழ்நிலையில், அந்த கட்சியின் பொருளாளர் பதவியை தன் கையில் எடுத்துக் கொண்டு அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சி பணிகளை கவனித்து வருகிறார். நடந்து முடிந்த சட்டசபை பொதுத் … Read more

அவ்வளவு இளக்காரமா போச்சா ஜாக்கிரதை! தேர்தல் ஆணையம் மீது கடுப்பான விஜயகாந்த்!

தமிழ்நாட்டில் நகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி மாதம் 28ஆம் தேதி அதாவது நேற்று ஆரம்பித்து பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதோடு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டிருக்கிறது. இவ்வாறான நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்ய போதுமான கால அவகாசம் இல்லை என்று தேமுதிக … Read more

மிகுந்த வேதனையுடன் விஜயகாந்த் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக, கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார். அவருக்கு பதிலாக அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சி பணிகளை கவனித்து வருகிறார். அதாவது சில மாதங்களுக்கு முன்னர் விஜயகாந்த் அவர்களுக்கு அமெரிக்காவில் சிகிச்சை வழங்கப்பட்டது, அதன்பிறகு இந்தியா வந்தவர் தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார். இதன் காரணமாக, கட்சி பணிகளை அவருடைய மனைவியும், மகன்களும் கவனித்து வருகிறார்கள். தேமுதிகவின் பொருளாளராக தன்னை நியமனம் செய்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த் … Read more

தேமுதிக தலைவரை சந்தித்த முக்கிய நடிகர்!

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தின் மூலமாக திரைத்துறையில் பிரபலமானவர் நடிகர் ராஜேந்திரநாத் 90 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நடிகர் ராஜேந்திரநாத் திரைப்பட உரிமையாளர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் விநியோகஸ்தர் என்று தெரிவிக்கப்படுகிறது. திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட கல்லூரியின் இயக்குனர் பிரிவில் பயிற்சி பெற்ற மாணவர் மற்றும் ஒளிப்பதிவாளர் போன்ற பல பன்முகத்தன்மை கொண்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது. பல திரைப்படங்களில் படித்து அதன் மூலமாக இவரை கிடைக்காத புகழ் தென்றல் என்ற … Read more

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டா? முக்கிய நபர் பரபரப்புக் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது இதனை போக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் நிலவிவரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக, சென்னைவாசிகள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் மிகுந்த அவதி அடைந்து வருகிறார்கள். பொதுமக்கள் குறிப்பாக சென்னையில் ஆங்காங்கே மாலை முதலே அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அதே போல கிராமங்களிலும் விவசாயத்திற்கு நீர் பாய்ச்ச மின்சாரம் இன்றி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் விஜயகாந்த். திராவிடர் முன்னேற்றக் … Read more

மத்திய மாநில அரசுகளுக்கு விஜயகாந்த் வைத்த முக்கிய கோரிக்கை!

கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க முன்வர வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்திருக்கின்றார். இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, நாளுக்கு நாள் அதிகமாகி வரும் கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தால் கட்டிட பணிகளை தொடர இயலாமல் கட்டுமான தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கின்றார். மணல், கம்பி, சிமென்ட், ஜல்லி, செங்கல், போன்ற கட்டுமான பொருட்களின் விலை 25 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதால் கட்டுமான பணிகள் … Read more

டிஸ்சார்ஜ் ஆனார் விஜயகாந்த்! தொண்டர்கள் மகிழ்ச்சி!

உடலை குறைவு காரணமாக சென்ற சில வருடங்களாகவே விஜயகாந்த் நீண்ட ஓய்வில் இருந்து வந்தார். அவ்வப்போது அவர் சென்னை மியாட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அத்துடன் கட்சி நடவடிக்கைகளில் இருந்தும் ஒதுங்கியே இருந்து வந்தார். ஆகவே கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் கையில் எடுத்துக்கொண்டு கட்சிகளின் வேலைகள் எல்லாவற்றையும் அவரே கவனித்து வந்தார். இந்த சூழலில் கடந்த 19ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக, … Read more

என்ன ஆனது விஜயகாந்துக்கு வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக, இன்று அதிகாலை 3 மணி அளவில் மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டதன் விளைவாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். இந்நிலையில் அவருக்கான மருத்துவ அறிக்கை வெளியாகாததால் பலவிதமான தகவல்கள் பரவத் தொடங்கியது. இந்தநிலையில், இன்று காலை முதலே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி தமிழகம் முழுவதும் மிக பரபரப்பாக உலா வந்து கொண்டிருந்தது. அவர் ஒரு அரசியல் கட்சி தலைவர் என்பதை கடந்து அவர் அடிப்படையில் ஒரு நல்ல மனிதராக … Read more

தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்த விஜயகாந்த்!

தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லா மாவட்டங்களிலும் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கட்டுப்பாடுகள் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட இருக்கிறது. நாளை முதல் அனைத்து விதமான கடைகளும் பகல் 12 மணி வரை மட்டுமே செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல இந்த நோய் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் இல்லை என வெளியாகும் செய்தி … Read more