தேவையான அளவு அனுபவித்து விட்டு கழற்றிவிட்ட முக்கிய அரசியல்வாதி? பிரபல பாடகி ஓபன் டாக்

Photo of author

By Parthipan K

தேவையான அளவு அனுபவித்து விட்டு கழற்றிவிட்ட முக்கிய அரசியல்வாதி? பிரபல பாடகி ஓபன் டாக்

கடந்த ஆகஸ்ட் மாதம் பிரபல தனியார் அமைப்பு ஒன்று நடத்திய இசை நிகழ்ச்சி ஒன்றில் தொடர்ச்சியாக காதல் தோல்வி பாடல்களையும், ஆண்களால் கைவிடப்பட்ட பெண்களின் மனநிலையை பற்றிய பாடல்களையும் இசைத்து வந்தார் நடிகை ஆண்ட்ரியா.

இதனால் குழப்பமடைந்த அவரது ரசிகர்கள், ஏன் சோகப் பாடல்கள் பாடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன ஆயிற்று என கேள்விகளை எழுப்பினார்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாக பல திடுக்கிடும் உண்மைகளை நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டார். நான் சமீபத்தில் திருமணமானவரும் அதே சமயத்தில் இளமையான அரசியல்வாதியுமான ஒருவருடன் சில காலங்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தொடர்பில் இருந்தேன்.ஆனால் அவர் என்னை தேவையான அளவிற்கு அனுபவித்து விட்டு தற்போது என்னை ஏமாற்றி விட்டார்.

இந்த பாதிக்கப்பட்ட மனநிலையில் இருந்து நான் மீண்டுவர சில காலம் ஆகலாம். அதற்காக நான் ஆயுர்வேத சிகிச்சைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த அரசியல்வாதி யார் என்று கேட்டதற்கு தான் எழுதிய ப்ரோக்கன் விங்ஸ் என்ற புத்தகத்தில் அந்த நபரைப் பற்றிய விவரங்கள் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன் என்றும் நடிகை ஆண்ட்ரியா கூறினார்.

இதனையடுத்து வருகிற 17-ஆம் தேதி அந்த புத்தகத்தை தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் மீண்டும் வெளியிட இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கிய புள்ளி ஒருவரின் பெயர் பயங்கரமாக அடிபடும் என பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன.அவர் இளமையான அரசியல்வாதியா அல்லது புதியதாக தமிழக அரசியலில் உதயமான அரசியல்வாதியா என்பதை ஆண்ட்ரியா வெளியிடும் புத்தகத்தை பார்த்தல் தெரிந்து விடும்.