பிரதமருக்கு தமிழக முதல்வர் எழுதிய அவசர கடிதம்

Photo of author

By Pavithra

பிரதமருக்கு தமிழக முதல்வர் எழுதிய அவசர கடிதம்

Pavithra

Updated on:

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று அந்த துறையின் மந்திரி ஹர்தீப் சிங் பூரி நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

இதன்படி, வரும் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் படிப்படியாக விமான சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் உள்நாட்டு விமானச் சேவையும் தமிழகத்தில் சென்னை கோவை திருச்சி ஆகிய மாவட்டங்களில் இயங்கும் என அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் வரும் 25 ஆம் தேதி தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் என்றும் ஜூன் மாதத்திற்குள் பிறகு தொடங்கலாம் எனவும் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.