தமிழக அரசின் அதிரடி உத்தரவு! இனி தனியாரில் படிக்கும் மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்த தேவையில்லை!

0
107
Tamil Nadu government's action order! Private students no longer need to pay school fees!
Tamil Nadu government's action order! Private students no longer need to pay school fees!

தமிழக அரசின் அதிரடி உத்தரவு! இனி தனியாரில் படிக்கும் மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்த தேவையில்லை!

கொரோனா தொற்றானது மூன்றாண்டுகள் கடந்தும் தற்பொழுது வரை சிறிதளவு மாற்றமில்லாமல் உள்ளது. முதலாம் ஆண்டு கொரானா தொற்று ஆரம்பித்ததிலிருந்து தற்போது வரை பல உயிரிழப்புகளை சந்தித்து விட்டோம். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலர் இந்த கொரோனா தொற்றால் தங்களது பெற்றோரை இழந்து நிற்கின்றனர். இவ்வாறு பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல சலுகைகளை அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களது படிப்பிற்காக அளித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது தமிழக அரசு மேலும் புதிய ஒரு சலுகையை அளித்துள்ளது. கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்தால் அவர்களுக்கு பள்ளி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவு மூலம் மாணவர்கள் கல்வி இடைநிற்றல் இல்லாமல் படிக்க இயலும். அதுமட்டுமின்றி இந்த புதிய உத்தரவு அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனா தொற்றால் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர்.

அதனால் அவர்கள் மேற்கொண்டு படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருவதாக பள்ளி கல்விக் குழு நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசு தற்போது அம் மாணவர்களுக்கு மட்டும் பள்ளி கட்டணம் அளிப்பதிலிருந்து விலக்கு அளித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில் அனைத்து தனியார் பள்ளிகளும் கொரோனா தொற்றால் தாய் தந்தையை இழந்த மாணவர்களுக்கு கட்டணம் கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதற்கான படிவத்தை பள்ளி கட்டண நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளும் கட்டண நிர்ணயத்தை சமர்ப்பித்து விட்டதா என்பதை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.