தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழா! மாணவர் சங்கத் தலைவர் கைது!

0
155
#image_title

தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழா!  மாணவர் சங்கத் தலைவர் கைது!

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதற்காக வந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத்தலைவரை தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில், பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் படித்த மாணவராக பட்டம் பெற வந்திருந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கோ.அரவிந்தசாமி என்பவரை எந்தவொரு காரணமுமின்றி அடாவடித்தனமாக தஞ்சை மாவட்ட காவல்துறை கைது செய்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எந்தவொரு போராட்டத்தை முன்னெடுக்காத மாணவர் சங்கத் தலைவரான அரவிந்த் சாமியை எப்படி கைது செய்ய முடியும்?? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி உள்ளனர். காவல்துறையினர் அராஜகப் போக்கை கடைபிடிப்பதாக சக மாணவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

author avatar
Savitha