தட்கல் டிக்கெட் புக் செய்பவர்களே.. டிக்கெட் ரிஜெக்டாகிவிட்டால் இப்படி செய்யுங்கள்!! முழு பணமும் திரும்ப கிடைத்துவிடும்!!

0
195
Tatkal ticket bookers.. Do this if your ticket gets rejected!! FULL MONEY BACK!!
Tatkal ticket bookers.. Do this if your ticket gets rejected!! FULL MONEY BACK!!

தட்கல் டிக்கெட் புக் செய்பவர்களே.. டிக்கெட் ரிஜெக்டாகிவிட்டால் இப்படி செய்யுங்கள்!! முழு பணமும் திரும்ப கிடைத்துவிடும்!!

இந்தியாவில் ரயில்வே போக்குவரத்து மிகவும் வசதியான போக்குவரத்தாக உள்ளது.தொலைதூர பயணங்களுக்கு ரயில் போக்குவரத்து சிறந்த தேர்வாக உள்ளது.நாட்டில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணம் செய்து வருகின்ற்னர்.

இதன் காரணமாக சில சமயங்களில் ரயில் டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் சிரமங்களை சந்திப்பர்.குறிப்பாக பொங்கல்,தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் டிக்கெட் கிடைப்பது அரிதாகிவிடும்.அதேபோல் அவசர காலங்களில் ரயில் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படும் நிலை ஏற்படும்.

இதனால் இந்திய ரயில்வே நிர்வாகம் உடனடியாக டிக்கெட் முன்பதிவு செய்ய தட்கல் முறையை கடந்த 1997 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.அவசர கால பயணத்திற்கு இந்த தட்கல் பேருதவியாக இருக்கும்.நீங்கள் எந்த வகுப்பில் பயணம் செய்வதாக இருந்தாலும் அதற்கான தட்கல் டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கும்.

பல அம்சங்கள் நிறைந்திருப்பதால் தட்கல் டிக்கெட் சில நிமிடங்களிலேயே புக் ஆகிவிடுமகிறது.இதனால் பதட்கல் புக் முக்கூட்டியே புக் செய்துவிட வேண்டும்.தினமும் காலை 10 மணிக்கு ஏசி வகுப்பிற்கான தட்கல் டிக்கெட் புக் ஆகிவிடும்.அதேபோல் ஸ்லீப்பர் கோச் முன்பதிவு 11 மணிக்கு தொடங்கி புக் ஆகிவிடும்.இதில் ஒரே நேரத்தில் 4 தட்கல் வரை ரயில்வே கவுண்டரிலும் IRCTC தளம் மூலம் 2 டிக்கெட்டுகள் வரை பெற முடியும்.

இதர டிக்கெட்டுகளை காட்டிலும் தட்கல் டிக்கெட் முன்பதிவிற்கான கட்டணம் சற்று அதிகமாக இருக்கும்.ஸ்லீப்பர் வகுப்பில் ரூ.200 ரூபாய் வரையிலும்,ஏசி வகுப்பில் ரூ.225 வரையிலும்,ஏசி3,ஏசி2 வகுப்பிற்கு 500 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஒருவேளை நீங்கள் தட்கல் டிக்கெட்டை ரத்து செய்தால் தங்களுக்கு கட்டண தொகை கிடைக்காது.ஆனால் டிக்கெட் ரத்து செய்வதற்கான காரணங்களை பொறுத்து இரயில்வே நிர்வாகம் பணத்தை திருப்பி கொடுத்துவிடும்.காத்திருப்பு பட்டியலில் உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை எனில் முன்பதிவு கட்டணத்தில் பிடித்தம் செய்து கொண்டு மீதி பணத்தை 3 நாட்களில் கொடுத்துவிடும்.
பணத்தை