மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்த டிடிஎப் வாசன்!!! இந்த முறை என்ன செய்யப் போகின்றது நீதிமன்றம்!!!

0
40
#image_title

மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்த டிடிஎப் வாசன்!!! இந்த முறை என்ன செய்யப் போகின்றது நீதிமன்றம்!!!

பிரபல யூடியூப் பிரபலம் டிடிஎப் வாசன் அவர்கள் மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி இந்த முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த முறை நீதிமன்றம் ஜாமீன் தருமா அல்லது மனுவை ரத்து செய்யுமா என்ற குழப்பத்தில் டிடிஎப் வாசன் அவர்கள் இருக்கின்றார்.

கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது பைக்கின் முன்பக்க வீலை தூக்கி சாகசத்தில் ஈடுபட்டார். அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் டிடிஎப் வாசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் டிடிஎப் வாசனை கைது செய்தனர். 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் டிடிஎப் வாசனை கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை முடிந்த பிறகு புழல் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து டிடிஎப் வாசன் தரப்பில் ஜாமீன் கோரி ஏற்கனவே 2 முறை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன். மனுவை விசாரித்த நீதிபதிகள் இரண்டு முறையும் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து மூன்றாவது முறையாக காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் டிடிஎப் வாசன் அவர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து அதை வாபஸ் வாங்கினார்.

இந்நிலையில் இன்று(அக்டோபர்3) சென்னை உயர்நீதி மன்றத்தில் டிடிஎப் வாசன் அவர்கள் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்ததை அடுத்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டிடிஎப் வாசன் அவர்கள் வாபஸ் வாங்கியுள்ளார்.