பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து! பதைபதைக்கும் வீடியோக்கள் உள்ளே! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

0
111
Terrible fire accident at the firecracker shop! Inside the eloquent videos! CM relief announcement!

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து! பதைபதைக்கும் வீடியோக்கள் உள்ளே! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் அருகே உள்ள பகுதியில் முருகன் பட்டாசு கடையில் நேற்று எதிர்பாராதவிதமாக இரவு நேரத்தில் தீ ஏற்பட்டது. அந்த பட்டாசு கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. அது பட்டாசு கடை என்பதன் காரணமாக தீ மளமளவென பற்றி எறிய ஆரம்பித்தது. அங்கு உள்ளே இருந்த வேலையாட்கள் பலர் அங்கேயே மாட்டிக் கொண்டதாக தெரிகிறது.

மேலும் அருகில் இருந்த லக்ஷ்மி பேக்கரி இயங்கி வந்துள்ளது. அதில் எட்டு  முழு சிலிண்டர்கள் சமையலுக்காக வைத்து இருந்ததன் காரணமாக தீ மேலும் தீவிரப்பட்டது. இந்த தீ விபத்தில் பேக்கிரியில் இருந்தவர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள சுற்றுலா அலுவலகத்தில் இருந்தவர்கள் என பலர் படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். அருகில் இருந்த பல கட்டடங்கள் சேதம் அடைந்து உள்ளது.

இந்த தீ விபத்தில் தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் அந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த பட்டாசு விபத்தில் உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. மேலும் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 5 பேர் பலியான இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிவாரண தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.