கொரோனா மட்டுமின்றி எச்.ஐ.விக்கும் மருந்து கண்டுபிடித்த தாய்லாந்து மருத்துவர்: பரபரப்பு தகவல்

0
242

கொரோனா மட்டுமின்றி எச்.ஐ.விக்கும் மருந்து கண்டுபிடித்த தாய்லாந்து மருத்துவர்: பரபரப்பு தகவல்

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது தாய்லாந்து மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸ் மற்றும் எச்.ஐ.வி ஆகிய இரண்டையும் குணப்படுத்தும் மருந்து ஒன்றை கண்டுபிடித்து உள்ளதாக வந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு மருத்துவர் ஒருவர் எச்ஐவி மற்றும் கொரோனோ வைரஸ் காய்ச்சல் ஆகிய இரண்டு நோய்களுக்கும் சேர்ந்து தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்து உள்ளதாகவும் இந்த மருந்தை வைரஸ் தாக்கிய நோயாளிக்கு கொடுத்ததில் அதன் பாதிப்பு பாதியாக குறைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது

லோபினாவிர், ரிட்டோனாவிர் என்ற இரண்டுவகை மருந்தையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து அவர் நோயாளிக்குக் கொடுத்து வருவதாகவும் ஆனால் அந்த விகிதம் கொஞ்சம் மாறினாலும் நோயாளிக்கு அலர்ஜி ஏற்படுத்தும் என்றும் எனவே சரியான விகிதத்தில் இந்த மருந்துஅளை கலந்து நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கொடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இருப்பினும் உலக சுகாதார மருத்துவ மருத்துவர்கள் இந்த மருந்து கொடுத்து ஆய்வு செய்து வருவதாகவும் உண்மையிலேயே இந்த மருந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்துமா? என்பது குறித்து அவர்கள் பரிசோதனைக்குப் பின்னரே தகவல் தெரிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது

இருப்பினும் கொரோனா மற்றும் ஹெச்ஐவி ஆகிய இரண்டுக்கும் சேர்த்து ஒரே மருந்தை கண்டுபிடித்த கண்டுபிடித்த தாய்லாந்து மருத்துவருக்கு உலகெங்கிலுமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது இந்த பாராட்டுக்கள் நிலைத்து நிற்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Previous articleசிவகார்த்திகேயன் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்
Next articleஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here