4 கோடியில் இருந்து 7 கோடியாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்திய நடிகர்!

0
69

4 கோடியில் இருந்து 7 கோடியாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்திய நடிகர்!

தற்போது உள்ள ஒருசில நடிகர்கள், அவர்கள் நடிக்கும் படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்று விட்டால் உடனடியாக தங்களுடைய சம்பளத்தை உயர்த்தி கொள்கின்றனர். அண்மையில் வெளியான மாநாடு திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் எஸ்.ஜே.சூர்யா 4 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். அந்த திரைப்படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. அதன்பின் கணிசமாக தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.

சமீபத்தில், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதனால் எஸ்.ஜே.சூர்யா ஹீரோ, வில்லன் என பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை காட்டிலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் படங்கள் பெரும் வெற்றியை பெறுகின்றன. இதன் காரணமாக, எஸ்.ஜே.சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புகள் வருகின்றன.

அந்த வகையில், வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடித்து அண்மையில் வெளியான படம் மாநாடு. மாநாடு படத்தில் காவல்துறை அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து அந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். மேலும் மாநாடு திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஷாலின் 33-வது படமான மார்க் ஆண்டனியில் வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தற்போது தெலுங்கு படமொன்றில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த கதையில் நடிப்பதற்காக நடிகர் எஸ்.ஜே.சூர்யா சுமார் 7 கோடி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநாடு படத்தின் வெற்றியின் மூலம் தற்போது 3 கோடி ரூபாய் உயர்த்தியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

author avatar
Parthipan K