Breaking News

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த பொருளின் மீதான சுங்கவரி சலுகை அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு!

The announcement made by the central government! Duty concession on this item extended till next year!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த பொருளின் மீதான சுங்கவரி சலுகை அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு!

ஒன்றிய நேர்முக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் உள்நாட்டு விநியோகத்தை அதிகரிப்பது மற்றும் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது உள்ளிட்டவை இந்த நடவடிக்கையின் நோக்கமாக உள்ளது.உலகளாவிய விலை வீழ்ச்சியில் சமையல் எண்ணெயின் விலை இறங்கு முகத்தில் தான் உள்ளது. இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை தற்போது கணிசமாக குறைந்துள்ளதன் காரணம் உலகளாவிய விலையின் வீழ்ச்சி மற்றும் இறக்குமதி தீர்வை குறைப்பதாகும்.

மேலும் சுத்திகரிக்கப்படாத பாமாயில் ,ஆர்பிடி பாமாயில்லின் ,ஆர்பிடி பாமாயில் சுத்திகரிக்கப்படாத சோயா பீன் எண்ணெய் ,சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய் , சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி எண்ணெய் , சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீது தற்போதுள்ள வரி விதிப்பு 2023 மார்ச் 31ஆம் தேதி வரை எந்த ஒரு மாற்றமில்லாமல் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்படாத பாமாயில் வகைகள் ,சோயா பீன் எண்ணெய் ,சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான இறக்குமதி தீர்வை தற்போது  பூஜ்யமாக உள்ளது.இந்நிலையில் இந்த மூன்று வகையான சமையல் எண்ணெய்களுக்கும் சுத்திகரிக்கப்படாத வகைகளுக்கான வேளாண் செஸ் மற்றும் சமூக நலத்திட்ட செஸ் 5.5 சதவீதமாக இருக்கும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment