பாஜக கூட்டணியை ஆட்சியில்லிருந்து வெளியேற்றப்படும்! மம்தா பேனர்ஜி பகிரங்கமாக கூறினார்!

0
132
The BJP alliance will be thrown out of power! Mamata Banerjee publicly said!
The BJP alliance will be thrown out of power! Mamata Banerjee publicly said!

பாஜக கூட்டணியை ஆட்சியில்லிருந்து வெளியேற்றப்படும்! மம்தா பேனர்ஜி பகிரங்கமாக கூறினார்!

ஒவ்வொரு ஆண்டும் 21ஆம் தேதி கொல்கத்தாவில் 1993 ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் நடத்திய பேரணியில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதை நினைவு கூறும் வகையில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் திரண்ட மக்களுக்கு மத்தியில் மம்தா பேனர்ஜி உரையாற்றினார். அப்போது அவர் நாட்டை கொள்ளையடிக்க முதலாளிக்கு இடம் கொடுத்த மோடி அரசு மக்களின்  வாழ்க்கையுடன் விளையாடு கொண்டிருக்கிறது எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும் மோடி அரசு அரிசி தயிர் பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மீது வரி விதித்து மக்களை அவதிக்கு உள்ளாகியுள்ளது   எனவும் கூறினார். இதற்கு திரிணாமுல்  காங்கிரஸ் சரியான பதிலடி கொடுக்கும் என்று மம்தா பேனர்ஜி தெரிவித்தார். மேலும் பாஜகவை கண்டு திரிணாமுல் காங்கிரஸ் பயனடையவில்லை என்றும் ஒன்றிய விசாரணை அமைப்புகளை கண்டு திரிணாமுல் காங்கிரஸ் பயப்படாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் தியாகிகளின் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும்  இருந்தும் திரிணாமுல்  காங்கிரஸ் தொண்டர்கள் லட்சக்கணங்கள் வருகை தந்திருந்தனர். மேலும் இறுதியில் மம்தா பேனர்ஜி 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியை ஆட்சியில் இருந்து வெளியேற்றப்படும் என  ஆவேசமாக பேசினார்.

author avatar
Parthipan K