சிறுவன் குடித்த குளிர்பானத்தில் ஆசிட்! சக மாணவர்களின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்!

0
287
The boy drank acid in the soft drink! The disaster caused by the game of fellow students!
The boy drank acid in the soft drink! The disaster caused by the game of fellow students!

சிறுவன் குடித்த குளிர்பானத்தில் ஆசிட்! சக மாணவர்களின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுக்கும்பல் பகுதியை சேர்ந்தவர் சுனில்.இவருடைய மனைவி சோபியா.இவர்களின் மூத்த மகன் அஸ்வின் இவர்  கன்னியாகுமரி மாவட்டம் ,குழித்துறை அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.அதில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்  சக மாணவர் கொடுத்த குளிர் பானத்தை குடித்துள்ளார்.அந்த குளிர் பானத்தை குடித்து பின்பு அவர் வீட்டிற்கு சென்றுளார்.அதன் பிறகு  அவருக்கு வாயிற்று வலி ஏற்பட்டுள்ளது .

உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு  தொண்டை ,குடல் மற்றும் இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு உடல் நிலை பாதிப்படைந்துள்ளது தெரியவந்தது. அதனால் அந்த சிறுவனை கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவருடைய பெற்றோர் களியக்காவிளை போலீசார்ரிடம் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் மாணவன் குடித்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்திருக்கலாம் என சந்தேகம் அடைகின்றனர்.

Previous articleகிராம சபை கூட்டத்தில் குறைகளை தெரிவித்த பொதுமக்கள்! நைசாக நழுவிய அமைச்சர்!
Next articleராஜராஜ சோழனை இந்து என்று சொல்வது கேவலமானது!! சீமானின் பகீர் பேட்டி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here