அதிரடியாக உயரப்போகும் பேருந்து கட்டணம்.. விளக்கமளிக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர்!!

Photo of author

By Rupa

அதிரடியாக உயரப்போகும் பேருந்து கட்டணம்.. விளக்கமளிக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர்!!

Rupa

The bus fare will increase dramatically.. Minister of Transport will explain!!

Tamilnadu Gov: கடந்த ஒரு வாரமாக இணையதளத்தில் பேருந்து கட்டணம் உயரப்போகிறது என்று செய்தி தான் பேசப்படுகிறது. இது ரீதியாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், சமூக ஊடகமெங்கும் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப் படப்போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமாக உள்ளது. ஆனால் அது முழுமையும் வதந்தி தான் தனியார் பேருந்து நிர்வாகம் தான் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இது ரீதியாக நீதிமன்றம், மக்கள் கருத்தை கேட்டு தரவுகளை சேகரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென கூறியுள்ளது.

அதை வைத்து தான் மக்கள் கருத்து கணிப்பு கூட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தான் தற்போது பேருந்து கட்டணம் உயர்வது குறித்து கருத்துக்கணிப்பு கூட்டம் நடத்தியுள்ளோம். தனியார் பேருந்து கட்டணம் உயர்த்துவதற்கு முன்பாக அரசு பேருந்து கட்டணத்தில் மாற்றம் உண்டாக வேண்டும். ஆனால் அரசு பேருந்து கட்டணத்தில் எந்த ஒரு மாற்றமும் வராத நிலையில் தனியார் பேருந்து நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது.

உலகளவில் கச்சா எண்ணெயின் விலையானது குறைந்த போதிலும் மத்திய அரசு டீசல் விலையை குறைத்த பாடில்லை அப்போதும் தமிழ்நாடு அரசு பேருந்து கட்டணத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனை சமாளிக்க முடியாமல் தான் தற்பொழுது தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். இது ரீதியாக தக்க அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்யும். அதுமட்டுமின்றி சரியான அறிவுரையும் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.