இந்த 18 பொருட்களுக்கு GST- யை குறைத்த மத்திய அரசு!

0
81

கொரோனா காலகட்டத்தில் அனைத்து விலைவாசியும் ஏறியுள்ள நிலையில் கொரோனா சம்பந்தப்பட்ட 18 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

கொரோனாவின் பராமரிப்புக்கு பல்வேறு மக்கள் நிவாரணங்களை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனாவின் பரிசோதனை உபகரணங்களின் ஜிஎஸ்டி விலையை குறைத்து உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

மாஸ்க், பிபிஇ கிட், பல்ஸ்ஆக்சிமீட்டர்கள், சானிடிசர்கள் மற்றும் பிற உபகரணங்கள் உள்ளிட்ட கோவிட் 19 அத்தியாவசிய பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை நிதி அமைச்சர் ரத்து செய்தார்.

 

ரெம்டெசிவிர் மற்றும் ஹெப்பரின் போன்ற வைரஸின் மருந்துகளுக்கும் ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைப்பதாக தெரிவித்துள்ளார். தடுப்பூசிகளுக்கு ஜிஎஸ்டி 5% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

நேற்று நடந்த சேவை வரி அதாவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து பல முடிவுகள் எடுக்கப்பட்டன. கொரோனா அத்தியாவசியமான பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்குமாறு பல்வேறு தரப்பு மக்கள் கேட்டு கொண்டதால், மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Tocilizumab என்ற மருந்துக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கரும்பூஞ்சை தொற்றுக்கு மருந்தாகும் ஆம்போடெரிசின் மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை . கொரோனா தடுப்பு மருந்தான ரெம்டெசிவிருக்கான ஜிஎஸ்டி 5% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

வெண்டிலேட்டர் மற்றும் மாஸ்க் போன்றவற்றிக்கு ஜிஎஸ்டி 12% இல் இருந்து 5% குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்யும் கருவிகளுக்கான ஜிஎஸ்டி 12%-ல் இருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் அளவை பரிசோதிக்கும் பல்ஸ் ஆக்ஸிமீட்டருக்கான ஜிஎஸ்டி வரி 12%லிருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது. சானிடைஸர்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% இருந்து 5% சதவீதம் என்று குறைக்கப்பட்டுள்ளது.

 

 

 

author avatar
Kowsalya