ஒரே தடுப்பூசியில் கொரோனா வைரஸ் அழியாது:! அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்!

0
56

ஒரே தடுப்பூசியில் கொரோனா வைரஸ் அழியாது:! அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்!

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் இந்த கொரோனா வைரஸிருக்கு,பல்வேறு நாடுகளும் தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் அதி தீவிரமாக இறங்கி உள்ளனர்.இதில் பல நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட சோதனைக்கு கூட சென்றுவிட்டது.

இந்நிலையில்,இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியல் ஆலோசகர் திடுக்கிடும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியவாறு:

கொரோனா வைரஸை தடுக்க பயன்படுத்தப்படும் தடுப்பூசி ஒரே ஒருமுறை மட்டும், நம் உடம்பில் போட்டாலே சரியாகாது என்றும்,மீண்டும் மீண்டும் அந்த தடுப்பூசியை போட்டால் மட்டுமே கொரோனா வைரஸ்க்கு எதிரான ஆற்றலை நம் உடலில் ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் கொரோனா எப்பொழுதும் நம்மிடையே இருந்து கொண்டுதான் இருக்கும்,ஃப்ளூ காய்ச்சலுக்கு எப்படி அவ்வப்போது தடுப்பூசி போட்டுக் கொள்கிறோமோ, அதுப்போல கொரோனாவுக்கும் மீண்டும் மீண்டும் தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் கொரோனாவை எதிர்கொள்ளும் சிறந்த ஒரே வழியென்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.