நாட்டின் பொருளாதாரம் மெதுவாக மேல் எழும்புகிறது – இலங்கை அமைச்சர் ரஞ்சிதா பண்டாரா!!

0
160
#image_title

நாட்டின் பொருளாதாரம் மெதுவாக மேல் எழும்புகிறது. இலங்கை அமைச்சர் திருப்பதி மலையில் பேட்டி.

இலங்கை அமைச்சர் ரஞ்சிதா பண்டாரா இன்று திருப்பதி கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார். சாமி தரிசனத்திற்கு பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய அவர் எங்களுடைய நாடு தற்போது பொருளாதார ரீதியாக மெதுவாக மேலெழும்பி வருகிறது.

இதற்கு முன் இருந்ததைவிட இப்போது நல்ல நிலைமையில் நாடு உள்ளது. இலங்கைக்கு தமிழ்நாட்டுடன் நீண்ட கலாச்சார தொடர்பு உள்ளது என்று கூறினார்.

author avatar
Savitha