கள்ளக்காதலி பேச்சால் மனைவியை கட்டி போட்டு கணவன் செய்த கொடுமை! தர்மபுரியில் பரபரப்பு!

0
134

தர்மபுரி மாவட்டத்தில் மனைவிக்கு தெரியாமல் காதலியுடன் குடும்பம் நடத்தி காதலியின் பேச்சை கேட்டு மனைவிக்கு சூடு போட்டு சித்ரவதை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் அருகே ஏரியூர் அடுத்த எம். தாண்டா கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியனும், பத்ரல்லி கிராமத்தை சேர்ந்த கலைவாணிக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

இப்பொழுது இவர்களுக்கு 5 வயதில் மகனும் 3 வயதில் மகனும் உள்ளனர். இந்த நிலையில் பாண்டியனுக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்து முதல் மனைவி இறந்த செய்தியை கலைவாணிக்கு இப்பொழுது தெரியவந்ததால் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு மூன்றாவதாக பெண்ணாகரம் அடுத்த நெருப்பூரை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்த உள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் அந்த காதலியின் பேச்சை கேட்டு கலைவாணியை வேறு பல ஆண்களுடன் தொடர்பு படுத்தி பேசி மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி தாய் வீட்டிற்கு விரட்டியுள்ளார். பின்னர் ஊர்மக்கள் சமாதானம் செய்து கணவனுடன் அனுப்பி வைத்திருக்கின்றனர்.

15 நாட்களுக்கு முன் பாண்டியன் மற்றும் அவரது பெற்றோர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கலைவாணியை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தனர். அப்போது அவர் அரை மயக்கத்தில் இருந்த பொழுது கலைவாணியின் கை கால் மார்பு அந்தரங்க பகுதி என உடல் முழுவதும் 16 இடங்களில் பழுக்கப் பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியால் ஈவு இரக்கமின்றி சூடு வைத்துள்ளனர்.

அப்பொழுது அலறல் சத்தம் வெளியே கேட்டுவிடக்கூடாது என்பதற்காக, கை கால் மற்றும் வாயை கட்டி உள்ளனர். ஒரு மணி நேரம் கழித்து கயிற்றை அகற்றிய பின்பு யாரிடமாவது இதைப் பற்றிக் கூறினால் உன்னையும் குழந்தைகளையும் கொன்று விடுவேன் என்று மிரட்டியதால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தப்பி ஓடி தாய் வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதையடுத்து கலைவாணியின் பெற்றோர் அவரை பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். காயம் ஆறிய நிலையில் தனக்கு நிகழ்ந்த கொடுமையை புகைப்பட ஆதாரங்களுடன் பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். கணவன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர்கள் உறவினர்கள் உடன் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடத்தில் கணவன் பாண்டியன் மற்றும் அவரது பெற்றோர் மீது மற்றும் அவருடன் தகாத உறவு வைத்துக் கொண்ட பெண்ணின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

சொந்த மனைவியை தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட மனைவியை உடலெல்லாம் சூடு வைத்து காதலி பேச்சைக் கேட்டு சித்திரவதை செய்த கணவரும், அவரது குடும்பத்தாரையும், கைது செய்ய வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

author avatar
Kowsalya