13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் இயக்குநர்! படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா..?

0
43

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் இயக்குநர்! படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா..?

 

13 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் கவுதமன் மீண்டும் திரைப்படம் ஒன்றை இயக்கி அதில் அவரே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

 

நடிகர் முரளி, நடிகை சிம்ரன் நடிப்பில் 1998ம் ஆண்டு வெளியான திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் கவுதமன் அவர்கள். அதன் பிறகு சிறிய இடைவெளிக்கு பிறகு 2010ம் ஆண்டு மகிழ்ச்சி என்ற திரைப்படத்தை இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். நடிகை அஞ்சலி கதாநாயகியாகவும் நாம் தமிழர் சீமான் அவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

 

இந்த நிலைலயில் 13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வா.கவுதமன் அவர்கள் திரைப்படம் ஒன்றை இயக்கி நடித்து வருகிறார். இயக்குநர் வா.கவுதமன் இயக்கி நடித்து வரும் திரைப்படத்திற்கு மாவீரா என்று பெயர் வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அந்த தலைப்பு மாற்றப்பட்டு “மாவீரா படையாண்டவன்” என்று பெயர் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

 

மாவீரா படையாண்டவன் திரைப்படத்தில் ராதாரவி, சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

 

மாவீரா படையாண்டவன் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். விகே புரொடக்சன்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகின்றது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் மாவீரா படையாண்டவன் படத்தின் பாடல்களை வைரமுத்து அவர்கள் எழுதியுள்ளார்.

 

மாவீரா படையாண்டவன் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விருதாச்சலாம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய பகுதிகளில் நடத்தி முடித்துள்ளனர். இதையடுத்து மாவீரா படையாண்டவன் திரைப்படத்தின்  இரண்டாம் கட்ட படப்பிடிப்பை படக்குழு விரைவில் தொடங்கவுள்ளது.

 

மாவீரா படையாண்டவன் திரைப்படத்தை பற்றி இயக்குநர் வா.கவுதமன் அவர்கள் “சிறியவர்கள் பெரியவர்கள் என அனைத்து வயதுள்ளவர்களும் ரசிக்கும்படி ஒரு ஆக்சன் அதிரடி திரைப்படமாக மாவீரா படையாண்டவன் திரைப்படம் உருவாகி வருகின்றது. மாவீரா படையாண்டவன் திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு தமிழ் சினிமா துறையில் மாபெரும் பேரதிர்வை ஏற்படுத்தும் என்று உறுதியாக கூறுகிறேன்”என்று கூறியுள்ளார்.