நடிகர்களும் நடிகைகளும் அடிக்கடி போட்டோஷூட் நடத்துவது வழக்கமாக கொண்டுள்ளனர். புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து கொண்டும் இருக்கின்றனர்.
குறிப்பாக இந்த லாக் டவுன் காலத்தில் எந்தத் திரைப்படமும் வெளிவராத நிலையில் சமூக வலைத் தளத்தில் வெளியிடும் புகைப்படங்களே அனைத்து தரப்பு ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியது.
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் சமந்தாவை பின்பற்றுவோரின் எண்ணிக்கை தற்போது 12 மில்லியனாக உள்ளது. நடிகை சமந்தாவை ராணாவின் திருமணத்தில் கடைசியாக கண்டிருப்போம்.
இவர் தமிழ் தெலுங்கு போன்ற சினிமாக்களில் பட வாய்ப்புகளை அதிக அளவில் அடுத்தடுத்து பெற்று தன் கைவசம் வைத்துள்ளார்.மேலும் தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி உடன் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்திலும் நடித்துள்ளார்.தெலுங்கில் நடிகர் நாகசைதன்யாவுடன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளாராம்.
12 லட்சம் ஃபாலோ வரிசை பெற்ற இந்த ஸ்பெஷல் தருணத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை 14 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

