இறந்த மகனை உப்பு குவியலில் வைத்த தந்தை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

0
90
The father put his dead son in a pile of salt! Shocking information that came out!
The father put his dead son in a pile of salt! Shocking information that came out!

இறந்த மகனை உப்பு குவியலில் வைத்த தந்தை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி கங்கம்மா, இவர்களுக்கு 12  வயதில் பாஸ்கர் என்ற மகன் உள்ளார். இவர் நேற்று காலை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். அந்த பகுதியில் ஒரு குழியில் தண்ணீர் தேங்கி நின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பாஸ்கர் அந்த குழியில் விழுந்து விட்டார். அவர் விழுந்தது யாருக்கும் தெரியாத நிலையில் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். பாஸ்கரை காணவில்லை என அவருடைய பெற்றோர் தேடிய நிலையில் அவர் அந்த குழியில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார் அதனை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் சமூக வலைதளங்களில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் மீது உப்பு குவியலை கொட்டினால் அவர்கள்  இரண்டு மணிநேரத்தில் உயிர் பிழைத்து விடுவார்கள் என்ற பதிவை பார்த்ததை நினைவில் கொண்ட சேகர் பாஸ்கர் உடல் மீது உப்பு குவியலை கொட்டியுள்ளார். ஆனால் எட்டு மணிநேரம் ஆகியும் பாஸ்கர் உயிர் பிழைக்கவில்லை. அதன்பிறகு பாஸ்கரின் உடல் உப்பு குவியலில்லிருந்து எடுக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. தற்போது பாஸ்கர் உடல் மீது உப்பு குவியல் கொட்டி வைத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைராலகி வருகிறது.

author avatar
Parthipan K