ஆண் நண்பன் செய்த செயலினால் சீரழிந்த சிறுமி! 13 வயது சிறுமிக்கு 26 பேர் செய்த பாலியல் வன்கொடுமை!

0
109
The girl who was ruined by the action of her boyfriend! 13-year-old girl sexually abused by 26 people!
The girl who was ruined by the action of her boyfriend! 13-year-old girl sexually abused by 26 people!

ஆண் நண்பன் செய்த செயலினால் சீரழிந்த சிறுமி! 13 வயது சிறுமிக்கு 26 பேர் செய்த பாலியல் வன்கொடுமை!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் டொம்பிவ்லி பகுதியைச் சேர்ந்த ஒரு 15 வயது சிறுமி இன்று போலீசாருக்கு ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவரது ஆண் நண்பன் கடந்த ஜனவரி மாதம் தன்னை பாலியல் வன் கொடுமை செய்ததாகவும், அந்த சம்பவத்தை அவன் வீடியோ ஆதாரமாக எடுத்துக் கொண்டான் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அந்த ஆண் நண்பன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கும் பகிர்ந்து உள்ளான். இது இப்படியே பல பேருக்கு சங்கிலி தொடராக அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவை வைத்து அந்த நபர்கள் அனைவரும் அந்த சிறுமியை காம இச்சைக்கு பயன்படுத்தி உள்ளனர்.

அந்த ஆண் நண்பனின் நண்பர்கள் பலரும் மிரட்டி மிரட்டியே அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த சிறுமியை மொத்தம் இருபத்தி ஒன்பது பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றனர். டொம்பிவ்லி, பெட்லாப்பூர், ரபலி, மூர்பாத் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அந்த சிறுமியை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளனர்.

தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து அந்த சிறுமி நேராக சென்று  நேற்று போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களில் இரண்டு சிறுவர்கள் உட்பட 26 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் கைதான அனைவரின் மீதும் போச்சோ சட்டத்தின் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.