திருமணம் ஆகும் முன்பே பெண்ணின் தடாலடி பதிலால் அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்!

0
82
The incident that shocked the woman with her tadalafil response before the marriage!
The incident that shocked the woman with her tadalafil response before the marriage!

திருமணம் ஆகும் முன்பே பெண்ணின் தடாலடி பதிலால் அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்!

தற்போதுள்ள சூழ்நிலைக்கு பெண்கள் இப்படித்தான் தைரியமாக இருக்க வேண்டும். பரவாயில்லை! சரியாக போய்விடும் என்று நினைத்தால் எதுவும் மாறாது. மேலும் திருமணம் முடிந்த கையோடு எல்லாம் நாங்கள் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என்று கூறி விடுவார்கள்.

இந்த பெண் மிகவும் தைரியசாலிதான். இதை போல் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும்.

22 வயதான இளம் பெண் ஒருவருக்கு, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹசீனா எனும் கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

தற்போது கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திருமணத்திற்கு குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உறவினர்கள் பங்கேற்க வேண்டும் என்ற காரணத்தால் திருமணம் சாதாரணமாக நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் திருமணத்தின் போது நடைபெற்ற மெழுகுவர்த்தி ஒளிரச்செய்யும் நிகழ்வின் பொழுது மணமகன் மற்றும் மணமகன் உறவினர்கள் அதிக அளவு குடிபோதையில் இருந்துள்ளனர்.

திருமண நாளன்றே மணமகன் அதிக குடிபோதையில் தடுமாறியதை கண்டு மணமகள் குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மணமகன் மணமகளை தன்னுடன் மணமேடையில் நடனமாட அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் மணமகனின் உறவினர்கள் சிலர் மணமகளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளனர்.  உடனடியாக மணமகளின் சொல்லை கேட்டு திருமணத்தை நிறுத்திய குடும்பத்தினர், மணமகன் குடும்பத்திற்கு மணமகள் குடும்பத்தின் சார்பாக கொடுக்கப்பட்ட நகைகள் மற்றும் பரிசுகள் அனைத்தும் திருப்பித் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

உடனடியாக மணமகன் குடும்பத்தினர் மணமகள் குடும்பத்தினரை சமாதானம் செய்ய காவல்துறையினர் உதவியை நாடியுள்ளனர். காவல்துறையினர்

மணமகள் குடும்பத்தினரை எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும் அவர்கள் திருமணத்தை நிறுத்தியாக வேண்டும் என்ற ஒற்றை முடிவில் இருந்துள்ளனர்.

மேலும், மணமகள் காவல்துறையிடம் மணமகன் மட்டுமல்லாமல் அவரது உறவினர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கின்றனர் எனவும் குற்றம் சாட்டியதையடுத்து காவல்துறையினர் மணமகன் குடும்பத்தினரிடம் பேசி மணமகள் குடும்பத்தின் சார்பாக கொடுக்கப்பட்ட அனைத்தையும் திருப்பி கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.