“இவன் என் நண்பன்”! “இவன் கூட அத பண்ணு” மனைவியை கட்டாயப்படுத்திய கணவன்!

0
80

குடி போதைக்காக தன் மனைவியை தன் நண்பர்களுடன் உறவு வைத்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்திய கணவன் மீது மனைவி போலீசில் புகார் செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எல்லார் பாளையத்தில் ஜெயமணி என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்பொழுது இவர் மனைவி பண்ருட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த புகாரில், எங்கள் இருவருக்கும் 2018 திருமணம் நடந்தது. எனது கணவர் அதிக குடிப்பழக்கம் உடையவர். குடிப்பழக்கத்திற்கு எதையும் செய்யும் கொடூரமானவர். நான் ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கும் பொழுது சத்து மாத்திரை என்று கூறி மயக்க மாத்திரையை கொடுத்து அவர் நண்பரான சுந்தர மூர்த்தி என்பவரை வைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது எனக்கு மயக்கத்தில் இருந்ததால் விஷயம் தெரியாது. சில தினங்களுக்கு முன் மணிகண்டன் என்ற ஒருவரை கூட்டி வந்து அவருடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு என்னை கட்டாயப் படுத்தினார். நான் எவ்வளவு தடுக்க முயன்றும் என்னால் தப்ப முடியவில்லை. அப்பொழுதுதான் நான் கர்ப்பிணியாக இருக்கும் பொழுதும் சுந்தரமூர்த்தி என்பவரால் பலாத்காரம் செய்யப்பட்ட உண்மையை என்னிடம் கூறினார். இந்த உண்மையை வெளியே சொன்னால் குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொல்வேன் என மிரட்டினார். சில தினங்களுக்கு முன் மீண்டும் ஒரு சிலரை கூட்டி வந்து கூட்டு பாலியல் வைத்துக் கொள்ளுமாறு என்னை வற்புறுத்தினார் அதனால் என் குழந்தையை எடுத்துக் கொண்ட அம்மா வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று அந்த புகாரில் கூறியுள்ளார்.

 

அந்தப் பெண் கொடுத்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் ஜெயமணி யை அழைத்து வந்து விசாரணை செய்த பொழுது அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார். ஜெயமணி மற்றும் அவருடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்ட சுந்தரமூர்த்தி , மணிகண்டன் மற்றும் மற்ற கூட்டாளிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

author avatar
Kowsalya