30 வருடங்களாக தன்னை பெண் என நினைத்து வாழ்ந்து வந்த ஆண்!

Photo of author

By Parthipan K

30 வருடங்களாக தன்னை பெண் என நினைத்து வாழ்ந்து வந்த ஆண்!

Parthipan K

Women as Man-News4 Tamil

30 வயதான பெண் ஒருவர் புற்றுநோய் இருப்பதாக மருத்துவமனைக்கு புற்று நோய் சிகிச்சைக்கு சென்ற போது அவர் ஒரு ஆண் என கண்டறிந்துள்ளனர்.

பிர்பம் என்பவர் கொல்கத்தாவை சேர்ந்தவர். வயது 30 ஆகிய இவர் திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகியுள்ளன.மேலும் இவர் எல்லோரைப் போலவும் தான் வாழ்ந்து வந்தார்.சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு அடி வயிற்றில் வழி ஏற்பட்டது.இதனால் இவர் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் மருத்துவமனையில் சிகச்சைக்காக சென்றுள்ளார்.மேலும் சிகிச்சையில் கண்டறியப்பட்ட ஒன்று மருத்துவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அந்த பெண்ணுக்கு ஆண்ட்ரோஜன் இன்செண்டிவிட்டி சிண்ட்ரோம் நோய் உள்ளது கண்டறியப்பட்டது.இந்த நோய் உள்ளவர்கள் மரபணு ரீதியாக ஆணாகவும் மேலும் ஒரு பெண்ணுக்கு உள்ள அனைத்து உடற்பண்புகளும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சோதனை முடிவில் இவருக்கு குருட்டு யோனி இருப்பதாக தெரியவந்தது.

இந்நிலையில் இவர்கள் பத்தாண்டு திருமண வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.எனவே மருத்துவர்கள் இவர்கள் தொடர்ந்து இல்லற வாழ்க்கை நடத்துவது குறித்து ஆலோசனையை வழங்கி வருகின்றனர் மேலும் இந்த ஜோடி குழந்தை பெற இயலாது என்றும் கூறியுள்ளனர்.