10,000 தடவை வந்த OTP, swiggy ஆர்டர்!

0
143
#image_title

பெங்களூருவாசி தனது ஃபோனில் 10,000 ஒரு OTP சரமாரியாகப் வந்த நிலையில் , தனது LazyPay கடன் விண்ணப்பக் கணக்கிலிருந்து ரூ.38,000-ஐ சம்பவம் அங்கு பெங்களூரில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

ஆட்டோமொபைல் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாகப் பணிபுரியும் சன்னகேசவா கே.எஸ். என்பவருக்கு 5,345 ரூபாய்க்கான ஸ்விக்கி ஆர்டர் கொடுக்கப்பட்டதாகக் கூறி, காலை 11:39 மணிக்கு கால் வந்துள்ளது. குரல் செய்தியானது, ஆர்டரைப் பற்றிய அவரது அறிவின் அடிப்படையில் 1 அல்லது 2 ஐ அழுத்துமாறு  சொல்லியுள்ளது, அவர் அத்தகைய ஆர்டர் எதுவும் செய்யாததால், அவர் 1 ஐ அழுத்தி உள்ளார்.  அதைத் தொடர்ந்து, உங்கள் கணக்குச் சரிபார்ப்பிற்காக ஒரு  OTP உள்ளிடுவதற்கான மெசேஜ் வந்துள்ளது.,

 

அவர் அந்த 6 நம்பர் OTP ஐ அதில் அளித்துள்ளார். 30 வினாடிகளுக்குப் பிறகு, குரல் செய்தியில், ‘உங்கள் கணக்கு சரிபார்க்கப்பட்டது, அது இப்போது பாதுகாப்பாக உள்ளது, நன்றி’ என்று அது சொல்லி உள்ளது.. இருப்பினும், அதை தொடர்ந்து நிறைய  கூடுதல் OTPகள் மற்றும் அழைப்புகளைப் பெற்றபோது தான் மோசடி செய்யப்பட்டதை அவர் விரைவில் உணர்ந்து கொள்கிறார்., பின் உடனடியாக அவரது கடன் விண்ணப்பக் கணக்கில் இருந்து ரூ.38,720 எடுக்கப்பட்டுள்ளது என மெசேஜ் வருகிறது என்று அவர் கூறினார்.

 

சன்னகேசவா கவனத்தை சிதறடிக்கும் வகையில் ஏகப்பட்ட அழைப்புகள் மற்றும் செய்திகளின் வருவதை கவனித்தார்.  அவர் தனது Swiggy கணக்கிலிருந்து வெளியேற முடிவு செய்தார். அவர் வெளிவந்த உடனே, மோசடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது. மேலும் இதை குறித்து உள்ளூர் போலீசில் புகார் அளித்த போதிலும், மறுநாள் எஃப்ஐஆர் பதிவு செய்ய அதிகாரிகள் பரிந்துரைத்தனர். Swiggy உடன் விஷயத்தை மறுபரிசீலனை செய்தபோது, ​​​​அவரின் கணக்கில் இருந்து அனைத்து தகவல்களும் நீக்கப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, Swiggy விசாரணைக்கு கூடுதல் அவகாசம் தேவை என்று கூறியது, அதே நேரத்தில் LazyPay மேலும் இழப்புகளைத் தடுக்க பாதிக்கப்பட்ட கணக்கைத் தற்காலிகமாகத் தடுத்துள்ளது..

author avatar
Kowsalya