நயன்தாரா நம்பி கையெழுத்திட்ட படம் காலை வாரி விட்டதாம்! அதிர்ச்சியான தகவல்!

Photo of author

By Parthipan K

நயன்தாரா நம்பி கையெழுத்திட்ட படம் காலை வாரி விட்டதாம்! அதிர்ச்சியான தகவல்!

Parthipan K

தமிழ்சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தான் நயன்தாரா. இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்.

இதற்குக் காரணம் இவருடைய வசீகர முகத்தோற்றமும் ஸ்டைலும் தான்.

ஆனால் தற்போது இவர் தான் நடித்த ஒரு படத்தை பற்றி கூறியிருக்கும் விஷயம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதாவது நயன்தாரா கிட்டத்தட்ட 68 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால் அவர் ‘நான் இந்த  படத்தில் மட்டும் நடிக்காமல் இருந்திருக்கலாம்’ என்று எண்ணிய  படம்தான் கொலையுதிர் காலம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஏனெனில் நயன்தாரா இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை கூட கேட்காமல் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

மேலும் இந்தப் படத்தைப் பற்றி கூறுகையில் ‘இந்த படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார் லேடி சூப்பர் ஸ்டார்.