அமெரிக்காவில் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்!!! 16 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!!

0
67
#image_title

அமெரிக்காவில் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்!!! 16 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!!

அமெரிக்கா நாட்டில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக 16 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா நாட்டில் மெய்னே மாகாணம் உள்ளது. இந்த மெய்னே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் திடீரென்று மர்மநபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக ஆண்டிராஸ்காகின் கவுன்டியின் ஷெரீப் அலுவலகம் தற்பொழுது இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

ஆண்டிராஸ்காகின் கவுன்டியின் ஷெரீப் அலுவலகம் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு தயாராக இருப்பது போல காட்சி இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய அந்த மர்ம நபர் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றதால் இன்னும் பரபரப்பு அதிகரித்துள்ளது.

தப்பி ஓடிய மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் தப்பியோடிய அந்த மர்ம நபர். குறித்த தகவல்கள் அல்லது அடையாளம் தெரிந்தால் தெரிவிக்கும் படி ஆண்டிராஸ்காகின் கவுன்டியின் ஷெரீப் கேட்டுக் கொண்டுள்ளார்.