Breaking News, Politics, State

அப்பா வை விரட்ட மகன் போட்ட பலே திட்டம்!! கட்சியே இனி அன்புமணி க்கு தான்!!

Photo of author

By Rupa

PMK : பாமக கட்சியானது இரண்டாக பிளவுபட போகிறது என்று நேற்று ராமதாஸ் வைத்த செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் நன்றாக அறிய முடிந்தது. அதுமட்டுமின்றி முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அன்புமணியின் அனைத்து பொறுப்புகளையும் மகள் வழி பேரனான முகுந்தனுக்கு தர ஏற்பாடு செய்யப்படுகிறதாம். அதேபோல நேற்று நடந்த பிரஸ் மீட்டில் முன்னதாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏன் யாரும் வரவில்லை என்பது குறித்து விவரித்து பேசியிருந்தார்.

இவரது இந்த பேட்டியானது அரசியல் களத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியதோடு இவர்களின் மோதல் போக்கு தீவிரம் அடைந்ததையும் காட்டியுள்ளது. நேற்று இவர் பேட்டி அளித்ததை வைத்து பார்க்கையில், ராமதாஸ் அழைப்பிற்கு கூட்டத்திற்கு வராத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிகிறது. புதிய நிர்வாகிகளை அமைத்து அரசியல் கட்சியை மேற்கொண்டு வலுப்படுத்த ராமதாஸ் முயற்சிப்பதாக கூறுகின்றனர். ஆனால் அன்புமணியும் ராமதாஸ் அவர்களின் செயலை பொறுக்க முடியாமல் மாற்று ஆலோசனை செய்து வருகிறார்.

என்னதான் ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினாலும் அதனை தற்போது வரை பொதுக்குழு அங்கீகரிக்கப்படவில்லை. மேற்கொண்டு தேர்தல் ஆணையமும் அன்புமணியை தான் தலைவர் என்ற முடிவில் உள்ளது. ஆகையால் இதனை பலமாக்கி அவசர பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளார். இதனை வைத்து கட்சி அதிகாரத்தை வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் அன்புமணி இருப்பதாக கூறுகின்றனர். இறுதி கட்டத்தில் தான் மாம்பழம் யார் கைக்கு போகும் என்பதை பார்க்க முடியும்.

“நீங்கள் அனைத்துப் பெண்களுக்கும் கணவர் அல்ல” – பிரதமர் மோடியை விமர்சித்த மம்தா பானர்ஜி!

உதயநிதிக்கு தயாராகும் அடுத்த பெரிய பதவி!! கனிமொழிக்கு வர போகும் ஆப்பு!!