விஜய் ஆண்டனி படத்திற்கு சிக்கலா ? படக்குழுவினரை கைது செய்த போலீசார் !

0
84

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக தனது பணியை தொடங்கி காலப்போக்கில் நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளர், பாடகர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் என பல வழிகளிலும் கலக்கி வருகிறார். தமிழில் ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார், இவரது முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்தது, இவரது படங்கள் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்திருந்ததால் ரசிகர்கள் பலருக்கும் இவரது படங்கள் பிடித்துப்போனது. நான் படத்தை தொடர்ந்து தமிழில் சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி திமிரு புடிச்சவன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் ‘பிச்சைக்காரன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது, நாட்டில் பண மதிப்பிழப்பு வந்தபொழுது இப்படத்தின் காட்சி பெரிதும் பேசப்பட்டது. இப்படத்திற்கு கிடைத்த வெற்றியினை தொடர்ந்து தற்போது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. ‘பிச்சைக்காரன்-2’ படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி, நடித்து, இசையமைத்து இருக்கிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் படக்குழுவினர் மூன்று பேரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அதாவது அனுமதி பெறாமல் சென்னை ஹைகோர்ட்டு மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை ட்ரோன் கேமரா வைத்து படம்பிடித்ததால் போலீசார் அவர்களை கைது செய்யவுள்ளனர். அதன்பின்னர் படக்குழுவினர் சென்று உண்மையை தெரிவித்ததும் போலீசார் அந்த மூன்று போரையும் ஜாமீனில் விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

author avatar
Savitha