தேர்வெழுத அறைக்குச் சென்ற மாணவர்!  அங்கு காத்திருந்த அதிர்ச்சி பதட்டத்தில் நேர்ந்த சம்பவம்! 

0
136

தேர்வெழுத அறைக்குச் சென்ற மாணவர்!  அங்கு காத்திருந்த அதிர்ச்சி பதட்டத்தில் நேர்ந்த சம்பவம்! 

மாணவர் ஒருவர் தேர்வு எழுத தேர்வு அறைக்குச் சென்ற பொழுது அங்கு காத்திருந்த அதிர்ச்சியால் பதட்டத்தில் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தைச் சார்ந்தவர் மாணவர் மணி சங்கர்.  இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இவர் இண்டர் மீடியட் என்னும் தேர்வு எழுதுவதற்காக அப்ளை செய்திருந்தார். இதற்காக அவர் நாளந்தா அருகே பிரில்லியண்ட் ஸ்கூல் என்னும் பள்ளியில் இண்டர் மீடியட் தேர்வு எழுதச் சென்றார். அங்கு அவரின் தேர்வறைக்குச் சென்ற பொழுது 50 மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக வந்திருந்தனர். மணி சங்கர் அந்த 50 மாணவிகள் நடுவில் தனி ஒரு மாணவராக தேர்வு எழுத அமர வைக்கப்பட்டார்.

இதனால் அவருக்கு மிகுந்த பதட்டம் உண்டாகி வியர்த்து கொட்டியது. எனவே அவர் திடீரென பதற்றத்தில் மயங்கி விழுந்தார். மணிசங்கரின் உறவினர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பதட்டம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு காய்ச்சலும் ஏற்பட்டதால் அவர் அங்குள்ள சதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் தற்போது அவர் நலமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

50 மாணவிகளுக்கு நடுவில் தேர்வு எழுதுவதற்காக அமர வைக்கப்பட்ட பிளஸ் டூ மாணவர் பயத்தில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.