பாலுமகேந்திராவின் நினைவு நாளில் இளையராஜா சொன்ன உண்மை!! இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே!!

Photo of author

By Gayathri

பாலுமகேந்திராவின் நினைவு நாளில் இளையராஜா சொன்ன உண்மை!! இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே!!

Gayathri

The truth told by Ilayaraja on Balumakendra's memorial day!! I didn't know this for so long!!

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்தவர் பாலுமகேந்திரா. கல்லூரியில் ஒளிப்பதிவு படிப்பு படித்து முடித்த பின் கேமராமானாக சினிமா துறையில் நுழைந்து சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகவும் சிறந்த இயக்குனராகவும் இன்றளவும் மக்கள் மனதில் பேசப்படக்கூடியவர் இவர் ஆவார்.

பிப்ரவரி 13 2014 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா அவர்கள் இறைவனடி சேர்ந்ததை அடுத்து அவருடைய ஒவ்வொரு நினைவு நாளையும் 4 நாட்கள் கொண்டாடுவதை வழக்கமாக செயல்படுத்தி வருகின்றனர். அவ்வாறாக இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட ” பாலு மகேந்திராவை கொண்டாடுவோம் ” என்ற நிகழ்ச்சியில் இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் ஆன பாலு மகேந்திராவை பற்றி இளையராஜா சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

இளையராஜா அவர்கள் பகிர்ந்திருப்பதாவது :-

பாலு மகேந்திரா அவர்களுடைய ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டு அவருடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்றுவதற்குள் இருக்கக்கூடிய இடைப்பட்ட காலத்தில் தான் நூறு படங்களுக்கு இசையமைத்து விடுவதாகவும், ஆனால் பாலு மகேந்திரா அவர்களுடைய திரைப்படத்திற்கு இசையமைக்கும் பொழுது மட்டுமே தான் மிகவும் சுதந்திரமாகவும் அந்த இசையை ரசித்துக்கொண்டே ஆத்மார்த்தமாக வேலை பார்ப்பதாகவும் இளையராஜா அவர்கள் தெரிவித்திருக்கிறார்.