வேலைக்கு சென்ற பெண் திடீர் மாயம்! அடுத்தநாள் பாம்பின் வயிற்றிலிருந்து சடலமாக மீட்ட அவலம்!

0
96
The woman who went to work suddenly lost her mind! The next day, the corpse was rescued from the snake's stomach!
The woman who went to work suddenly lost her mind! The next day, the corpse was rescued from the snake's stomach!

வேலைக்கு சென்ற பெண் திடீர் மாயம்! அடுத்தநாள் பாம்பின் வயிற்றிலிருந்து சடலமாக மீட்ட அவலம்!

இந்தோனேஷியாவில் பல வகையான மலை பாம்புகள் உள்ளது. இந்த மலைப்பாம்புகள் சுற்றி திரியும் பகுதிகளில் ஏதேனும் குழந்தைகள் அல்லது நபர்கள் இருந்தால் அவர்களையே விழுங்கி விடும். இதுபோல பல சம்பவங்கள் இந்தோனேசியாவில் அரங்கேறி உள்ளது. அந்த வகையில் ஜாம்பி என்ற பகுதியில் ஜஹரா என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு தோட்டத்து வேலைக்கு சென்றுள்ளார்.

தோட்டத்து வேலைக்கு சென்றவர்கள் அனைவரும் மாலை நேரத்தில் வீடு திரும்பிய நிலையில், இவர் மட்டும் வீட்டிற்கு வரவில்லை. இவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர். ஆனால் நேரம் கடந்ததே தவிர இவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அடுத்த நாள் காலை நேரத்தில் 16 அடி நீளம் உள்ள ஒரு மலைப்பாம்பு தோட்டத்தின் ஓரத்தில் நகர முடியாமல் இருந்துள்ளது. அந்த பாம்பின் வயிறும் மிகவும் பெரிதாக காணப்பட்டது.

மலைப்பாம்பு ஜகராவை கொன்று விழுங்கி இருக்கக்கூடும் என அவரது உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர். உடனடியாக அந்த மலைப் பாம்பை கொன்று, வயிற்றை கிழித்துப் பார்த்தனர். அவ்வாறு பார்த்ததில் அனைவரும் அதிர்ந்து போய் அப்படியே உறைந்து விட்டனர். ஏனென்றால் காணாமல் போன ஜகரா உயிரிழந்த நிலையில் பாம்பின் வயிற்றுக்குள் இருந்துள்ளார். தோட்டத்து வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது இந்த மலைப்பாம்பு அவரை இறுக்கி கொன்று விழுங்கி இருக்கிறது. அங்குள்ள மக்கள் அனைவரும் இந்த சம்பவம் குறித்து அச்சத்தில் உள்ளனர்.