பாரிமுனையில் விபத்தான கட்டிடத்தில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை – தீயணைப்பு துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன்!!

0
122
#image_title

பாரிமுனையில் விபத்தான கட்டிடத்தில், எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை! மேலும் கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது – தீயணைப்பு துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் பேட்டி.

சென்னை பாரிமுனை பகுதியில் விபத்தில் இடிந்து விழுந்துள்ள கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தீயணைப்பு மீட்புப்பணிகள்.

காலை 10 மணி அளவில் அர்மேனியன் தெருவில் கட்டிடம் ஒன்று விழுந்தது என்று தகவல் கிடைத்ததும் நாங்கள் இங்கு வந்தோம், முதலில் நாங்கள் மனித உதவிகளை கொண்டு இங்கு சுற்றியுள்ள பொருட்களை அப்புறப்படுத்திதினோம். 150கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் வந்து இந்த மீட்பு பணிகளை மேற்கொண்டோம்.

பின்பு மீட்பு பணிக்கு தேவைப்படும் பொருட்களான வெட்டு கருவிகள், உடைக்கும் கருவிகள் மற்றும் மோப்ப நாய்களையும் கொண்டு முதலில் கட்டிடங்களுக்குள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்தோம்.95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது, இதுவரை எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை.

author avatar
Savitha