வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதும்! ஒரே நாளில் மருக்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடும் 

0
83
These household items are enough! In one day, the warts will disappear without knowing where they were
These household items are enough! In one day, the warts will disappear without knowing where they were

வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதும்! ஒரே நாளில் மருக்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடும்

ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் உடலில் உருவாகும் மருக்கள் அவர்களின் அழகை கெடுக்கின்றன. முகம், தொடைப்பகுதி மற்றும் கழுத்துப் பகுதிகளில் அவர்களின் அழகை கெடுக்கக்கூடிய விதத்தில் இந்த மருக்கள் அமைந்திருக்கின்றன.

நம்முடைய உடலில் இருக்கும் இறந்த செல்கள் தான் அழகை கெடுக்க கூடிய இந்த மருக்களைஉருவாக்குகிறது. இவ்வாறு ஆண்கள் மற்றும் பெண்களின் அழகை கெடுக்கும் வகையில் உருவாகிய இந்த மருக்களை அழிக்க எவ்வளவோ முறைகளை கையாண்டும் அது மீண்டும் மீண்டும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

இனி வீட்டில் உள்ள பொருட்களை மட்டுமே கொண்டு நம் உடலில் உள்ள மருக்களை எவ்வாறு அழிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: செய்முறை:

இஞ்சி – 4 துண்டு
டூத்பேஸ்ட் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை

செய்முறை:

இஞ்சி மண்ணுக்கு அடியில் விளைவதால் அதிகமான நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதில் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் A வைட்டமின் C, கால்சியம்,பொட்டாசியம்,சோடியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்டவைகளும் உள்ளது.

வீட்டில் சமையலுக்கு பயன்படும் இந்த இஞ்சி வீட்டு வைத்தியத்தில் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

அந்த வகையில் இந்த இஞ்சி உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. வாய் துர்நாற்றம், பல் வலி, வாயில் உள்ள கிருமிகளை அழிக்கவும் பயன்படுகிறது.

 

இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட இஞ்சியை கழுவி தோல் நீக்காமல் தேங்காய் துருவது போல துருவி எடுத்துக்கொள்ளுங்கள். இதனையடுத்து இவ்வாறு துருவிய இஞ்சியை வடிகட்டியில் போட்டு ஒரு ஸ்பூன் வைத்து அழுத்தினால் அதிலிருந்து இஞ்சி சாறு கிடைக்கும்.

 

 

இவ்வாறு கிடைத்த 1 தேக்கரண்டி இஞ்சி சாறுடன் 1/2 தேக்கரண்டி Paste, 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா உள்ளிட்டவைகளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

 

இந்த கலவையை இரவு தூங்குவதற்கு முன் காட்டன் பட்ஸ் உதவியுடன் மருக்களின் மேல் வையுங்கள். இதேபோல் 2 அல்லது 3 நாட்கள் செய்யுங்கள் மருக்கள் இருந்த இடமே காணாமல் போய் விடும். மருக்கள் அளவை பொறுத்து ஒரே நாளில் காணாமல் போகவும் வாய்ப்புள்ளது.