PMK: பாமக கட்சியில் தலைமைக்காக அப்பா மகனுக்கிடையே போட்டி நிலவில் வரும் வேலையில் ஒருவருக்கொருவர் எதிர் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கட்சி நிர்வாகிகளை ஒருவர் பணி அமர்த்துவதும் மற்றொருவர் அவரை நீக்குவதென்று செய்து வருவதால் நிர்வாகிகள் அனைவரும் குழம்பி தவிக்கின்றனர். இதற்கு ஒரு முடிவில்லாமல் உள்ளது. அதிலும் ராமதாஸ், அன்புமணி பாஜகவுடன் கூட்டணி வைக்க தனது மனைவியுடன் வந்து மிகவும் வற்புறுத்தி கேட்டதாக செய்தியாளர்கள் மத்தியில் கூறினார்.
தற்போது அதற்கு அன்புமணி மறுப்பு தெரிவித்து பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், எனது அப்பா கூறியது போல் பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து எதுவும் நான் பேசவில்லை. அவரே தான் பாஜகவுடன் கூட்டணி வைக்க சொன்னார். அதேபோல தற்போது விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எனது அப்பா மீது திடீரென்று பாசம் பொங்கி உள்ளது. இவை அனைத்தும் திமுகவின் சூழ்ச்சியால் தான் நடக்கிறது. தற்போது நடைபெற்று வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் முக்கியமான மூன்று பேர் தான் காரணம்.
அவர்களின் சுய லாபத்திற்காக ராமதாசை பயன்படுத்துகின்றனர். தற்போது அவருக்கு வயது முதிர்வு ஆகிவிட்டது அதனால் குழந்தையாகவே அவர் மாறிவிட்டார்.அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே. அதிலும் தைலாபுரத்திற்கு சி வி சண்முகம் வந்த போது எதற்காக இங்கு வந்துள்ளார் என்று கேட்டேன். சிவி இங்கு பத்திரிக்கை வைப்பதற்காக தான் வந்தார் என்று ராமதாஸ் கூறினார். ஆனால் கூட்டணி பேச்சு வார்த்தை நடந்ததாக அதன் பின்னர் தெரிவித்தனர்.
வயது முதிர்ந்த காலத்தில் மருத்துவர் ராமதாசை 3 பேர் அவர்களின் சுயநலத்திற்காக பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.