Adjustment கேட்டாங்க.. ஒரே டைமில் இருவர்!! 80s ஹீரோயினின் மனம் திறந்த பேட்டி!!

0
195
They asked for adjustment.. Two people at the same time!! Open minded interview of 80s heroine!!
They asked for adjustment.. Two people at the same time!! Open minded interview of 80s heroine!!

Adjustment கேட்டாங்க.. ஒரே டைமில் இருவர்!! 80s ஹீரோயினின் மனம் திறந்த பேட்டி!!

சினிமா துறையில் இருப்பவர்கள் பலரும் பல கசப்பான அனுபவங்களை கடந்து தான் வந்திருக்க வேண்டும்.அந்த வகையில் பெண்கள் பலரும் தற்பொழுது வரை அனுபவித்து வரும் பிரச்சனை என்றால் இந்த அட்ஜெஸ்மென்ட் தான்.இப்போதிருக்கும் நடிகைகள் தங்களுக்கு நடந்ததை வெளிப்படையாகவே வெளியே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.சில வருடங்களுக்கு முன்பு கூட இதற்கென்று சமூக வலைத்தளத்தில் தனித்துவமான metoo என்ற ஹாஷ்டாக்கானது மிகவும் ட்ரெண்டானது.இதில் வைரமுத்து போன்ற பெரிய ஜாம்பவான் பெயர்கள் அடிப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் 80s முதல் 90s வரை பலரது விருப்பமுள்ள கதாநாயகிய இருந்தவர் தான் தாரணி.இவர் பெருமளவு படங்களில் கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் சிறய கதாபாத்திரமே அனைவரும் பேசுமளவு இருந்துள்ளது.குறிப்பாக வடிவேலுவிற்கு ஜோடியாக மாலா என்ற காதாபத்திரத்தில் நடித்தது, இப்பொழுது வரை சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கில் உள்ளது.இவர் ஹீரோயினியாக நடித்த முதல் படமே மிகவும் கசப்பான அனுபவத்தை அளித்ததால் இவர் அதற்கு அடுத்த படங்களில் ஹீரோயினியாக கூட நடிக்கவில்லை.

இவர் முதலாவதாக நடித்த படத்தின் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் இருவரும் இவரிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி கேட்டுள்ளனர்.இவர்,நான் அப்படிப் பட்ட பெண் கிடையாது.நீங்கள் வெளியே சென்று என்னை பற்றி கேட்டுப்பாருங்கள்,நான் அப்படிப்பட்ட பெண் என்று கூறினால், நான் நீங்கள் செய்ய சொல்வதை செய்கிறேன் எனக் கூறியுள்ளார்.

அந்த இயக்குனரோ இவ்வாறு தாரணி கூறியதும் ஏதும் கொண்டுக்கொள்ளாமல் சென்று விட்டார்.ஆனால் அந்த ஒளிப்பதிவாளரோ தாரணி கூறியதை மனதில் வைத்து பழி வாங்க நினைத்துள்ளார்.எச் எம் வி என்ற லைட்டானது மிகவும் வெப்பமாக தான் இருக்கும்.படபிடிப்பு வேலையின் போது, அந்த லைட் போகசை தாரணி முகத்திற்கு நேராக திருப்பியுள்ளார்.இதனால் தாரணி முகம் நெருப்பில் வெந்தது போல எரிய ஆரம்பித்துள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் உள்ளவர்கள் அனைவரும் இது தெரியாமல் நடந்து என காரணம் கூறினார்கள் தவிர இதனை கண்டுக்கொள்ளவில்லை.இதுக்குறித்து அவர் ஓர் பேட்டியில் மனம் திறந்து கூறியுள்ளார்.ஆனால் இவர் முதலாவதாக கதாநாயகியா நடித்தப் படம் பாலைவன பறவைகள் இதன் இயக்குனர் செந்தில்நாதன் மற்றும் ஒளிப்பதிவு கேசவன் என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் முதல் படமே இவ்வாறு இருந்ததால் அடுத்தடுத்த படித்தில் ஹீரோயினாக நடிக்க விரும்பவில்லை.

author avatar
CineDesk