சுருக்கு பையில் இருக்கும் பணத்தை பறிக்கும் ஆட்சிதான் இது! முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பதிவு!

0
195
#image_title

சுருக்கு பையில் இருக்கும் பணத்தை பறிக்கும் ஆட்சிதான் இது! முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பதிவு!

மக்களின் சுருக்கு பையில் இருக்கும் பணத்தை கூட பறித்துக் கொள்ளும் ஆட்சியாகத்தான் பாஜக கட்சியின். ஆட்சி இருக்கின்றது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆங்கில நாளிதழான பிஸ்னஸ் லைன் என்ற நாளிதழில் வங்கிகள் இதுவரை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச தகை இல்லாதற்கு அபராதம் வசூலித்தே இதுவரை 21000 கோடி ரூபாய்க்கும் மேல் ஏழைகளிடம் இருந்து வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியிட்டிருந்தது. இதை சுட்டிக் காட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி என்று பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் அவர்கள் பகிர்ந்துள்ள பதிவில் “மோடியின் ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி. ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன? சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.

சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?

இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி. இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?” என்று பதிவிட்டு கடைசியில் இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று ஹேஸ்டேக் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.