காந்தி ஜெயந்தியை யொட்டி இத்திட்டத்தை தீவிர படுத்த வேண்டும்!! மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாமக தலைவர் கோரிக்கை!!

காந்தி ஜெயந்தியை யொட்டி இத்திட்டத்தை தீவிர படுத்த வேண்டும்!! மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாமக தலைவர் கோரிக்கை!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டிவிட்டார் பக்கத்தில் மத்திய மற்றும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது பொது இடங்களில் புகை புகைப்பிடிப்பது தடை என்ற சட்டத்தை இதே காந்தி ஜெயந்தி நாளில் அமல்படுத்தப்பட்டது.ஆனால் தற்பொழுது இது தீவிர செயல்பாட்டில் இல்லை. இதனால் புகைப்பிடிப்பவர்கள் மட்டும் இன்றி அதனை சுவாசிப்பவர்களுக்கு பெரும் பாதிப்பை அடைகின்றனர் என்ற வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்வதற்கான சட்டம், 14 ஆண்டுகளுக்கு முன் இதே காந்தி பிறந்த நாளில், நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, நீண்ட அரசியல், சட்டப் போராட்டத்திற்கு பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டது. அது ஒரு வரலாற்று நிகழ்வு.

புகைத்தடை சட்டம் இன்று வரை ஏட்டில் இருந்தாலும் நடைமுறையில் இல்லை என்பது தான் வேதனையான உண்மை. பொது இடங்களில் ஏராளமானோர் எந்த தடையும், தயக்கமும் இன்றி புகைப்பிடிக்கின்றனர். அதனால், பெண்களும், குழந்தைகளும் முகம் சுழிப்பதையும் காண முடிகிறது.

இந்தியாவில் புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். பிறர் பிடித்து விடும் புகையை சுவாசிப்பதால் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் இறக்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள். பொது இடங்களில் புகைப்பதை அனுமதிப்பதால் ஏற்படும் பெருங்கேடு இது.
https://twitter.com/draramadoss/status/1576428669706600449
யாரோ புகைப்பதை சுவாசிப்பதால் எந்தத் தவறும் இழைக்காத பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இதைத் தடுக்க பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் காந்தியடிகள் பிறந்த இந்த நாளில் இருந்து தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.
https://twitter.com/draramadoss/status/1576428673238200320

இவ்வாறு இருக்கையில் மத்திய மற்றும் மாநில அரசு பொது இடங்களில் புகை பிடிப்பதற்கான தடை சட்டத்தை தீவிர படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Comment