எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த மூன்று நபர்கள்! கையில் வைத்திருந்த பொருட்கள் இத்தனை கிலோவா?

0
66
Three persons who entered the border illegally! How many kilos of items did you have on hand?
Three persons who entered the border illegally! How many kilos of items did you have on hand?

எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த மூன்று நபர்கள்! கையில் வைத்திருந்த பொருட்கள் இத்தனை கிலோவா?

அசாம் மாநிலத்தில் உள்ள இந்தியா வங்காளதேசம் நாடுகளின் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு எப்போதும் போல எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கமான எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வங்க தேச எல்லையிலிருந்து மூன்று நபர்கள் சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். பாதுகாப்பு படையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் பிடிபட்ட 3 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்த கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அந்த கும்பலிடம் இருந்து மட்டும் 95 கிலோ மதிப்புள்ள போதைப் பொருளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பிடிபட்ட வங்காளதேசத்தில் 3 பேரையும் கைது செய்த எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை மாநில போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் மேலும் விசாரணை செய்ய வேண்டும் என்றும், இதற்காகத்தான் வந்தார்களா? அல்லது வேறு எதும் காரணமா? என்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.