ஆப்கானிஸ்தானில் குழந்தைகளை கம்பியின் மீது தூக்கி வீசிய தாய்! – பிரிட்டிஷ் அதிகாரி!

0
86

ஆப்கானிஸ்தானில் கடும் பிரச்சினைகளுக்கு இடையே தாய் ஒருவர் தனது குழந்தைகளை காபூல் ஏர்போர்ட் உள்ள ரேசர் கம்பிகளின் மீது தூக்கி வீசிய சம்பவம் தான் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் ஏர்போட் அலறல் மற்றும் விரக்தி மிகுந்த இடமாக மாறிக்கொண்டு வருகிறது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுத்து வருகிறார்கள். மேலும் தாலிபான்கள் இடம் இருந்து தப்பிப்பது ஒன்று மட்டுமே இந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் கனவாக உள்ளது என பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

 

சில பெண்கள் தங்கள் குழந்தைகளின் ஏர்போர்ட்டில் போட்டு வைத்திருக்கும் கம்பியின் மேல வீசி சென்றார்கள். ஒரு சில குழந்தைகள் கம்பியில் சிக்கி கொண்டது என்று அவர் கூறினார். இது மிகவும் அதிர்ச்சிகரமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

 

மேலும் இந்த நிலையைப் பற்றி தங்கள் குழுவில் உள்ள பல ஆண்கள் தங்கள் குடும்பங்களை நினைத்து அழுததாகவும், அவர்களுக்கு ஆறுதல் கூறி வருவதாகவும் அவர் சொல்லியுள்ளார்.

 

அந்த நாட்டு மக்கள் பகல் இரவு என எதையும் பார்க்காமல் தங்கள் குழந்தைகளை வைத்துக் கொண்டு உயிரை பணையம் வைத்து அங்கு காத்திருக்கிறார்கள். மேலும் தாலிபான்கள் அந்த நாட்டு மக்களை துப்பாக்கி சூடு நடத்தியும் மற்றும் மேலும் பலவாறு துன்புறுத்துகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரிட்டிஷ் இராணுவம் ஆயிரக்கணக்கான மக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து சில நாட்களில் வெளியேற்ற முயற்சிப்பதால், ஒவ்வொரு நாளும் கடந்து செல்கையில், நிவாரணப் பணி மேலும் மேலும் அவசரமாகவும் அவநம்பிக்கையுடனும் செல்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இது ஒரு மனிதாபிமான பணியாகும், இது ஒரு போர் இடம் போல் காட்சி அளிக்கிறது. தலிபான்கள் பிரிட்டிஷ் வீரர்களிடமிருந்து ஒரு மீட்டர் தொலைவில் தான் இருக்கிறார்கள்.

சாலையில், காபூல் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பிரிட்டிஷ் விமான நிலையை அடைய முயற்சிக்கும் மக்களை தலிபான்கள் கட்டுப்படுத்துகின்றனர்.

சில நேரங்களில் அவர்கள் துப்பாக்கியால் மேலே சுட்டு, மக்களை அச்சுறுத்தி வைத்து இருக்கின்றனர்.ஆப்கானிஸ்தானில் காபூலில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த தலிபான்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் கட்டுப்பாட்டை எடுத்தனர். தாலிபான்களின் தலைவர் தோஹாவில் எதிர்கால அரசாங்கத் திட்டங்களைப் பற்றி விவாதிக்கிறார்கள் என்றும் மற்றும் ஆப்கானிஸ்தானில் அரசாங்கத்தை உருவாக்க சர்வதேச சமூகம் மற்றும் ஆப்கானிஸ்தான் கட்சிகளுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதாக கூறினார்.

 

ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலையை உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது, ஏனெனில் மக்கள் தங்கள் மக்களை பாதுகாக்கும் முயற்சியில் ஆப்கானிஸ்தானில் இருந்து தன் நாட்டு மக்களை மீட்க முயன்று வருகிறது.

author avatar
Kowsalya